மேலும் அறிய

TN Assembly session 2022 : ’ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள்’ இன்று அவை எப்படி நடக்கும், ஆளுநர் ரவி என்ன பேசுவார்..?

சிறப்பாக செயலாற்றும் முதல்வர் என பட்டமளிப்பு விழாவில் தனது பேச்சை தொடங்கிய ஆளுநர் ஆர்.என்ரவி, இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் என்னச் சொல்லி உரையை தொடங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

வழக்கமாக புதிய ஆண்டின் முதல் மாதத்தில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெறும். 2022ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.TN Assembly session 2022 : ’ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள்’ இன்று அவை எப்படி நடக்கும், ஆளுநர் ரவி என்ன பேசுவார்..?

முதல் கூட்டம் என்பதால் முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு, சட்டப்பேரவை நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருவார். அவரை சட்டப்பேரவையின் சபாநாயகரான அப்பாவு, வரவேற்று பேரவைக்குள் அழைத்து செல்வார்.

பின்னர் ஆளுநர் தன் கையோடு கொண்டுவந்திருக்கும் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிக்கத் தொடங்குவார். தமிழக அரசு முன் கூட்டியே தயாரித்துக் கொடுக்கும் அறிக்கையைதான் ஆளுநர் தனது உரையாக படிப்பது மரபாக உள்ளது. அதில் தேவையேற்பட்டால் சிறு மாற்றங்களை ஆளுநர் செய்துக்கொள்ளலாமே தவிர, அவரே ஒரு உரையை தயாரித்து வந்து படிக்க முடியாது.

ஆளுநர் ரவிக்கு தமிழ் தெரியாது என்பதால் தனது உரையை அவர் ஆங்கிலத்தில் வாசிப்பார். அவர் படித்து முடித்ததும், அந்த உரையை அப்படியே தமிழாக்கம் செய்து சபாநாயகர் அப்பாவு படிப்பார். பொதுவாக, ஆளுநர் உரையில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு,  புதிய திட்டங்கள் அறிவிப்பு, முக்கியமான தீர்மானங்கள் கொண்டுவருவது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.TN Assembly session 2022 : ’ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள்’ இன்று அவை எப்படி நடக்கும், ஆளுநர் ரவி என்ன பேசுவார்..?

 

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரைபோலவே, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவியும் தன்னுடைய முதல் உரையை வாசிக்கவிருப்பதால் அவர் என்னச் சொல்லி தனது பேச்சை தொடங்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலினோடு ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில், சிறப்பாக செயலாற்றக் கூடியவர் மு.க.ஸ்டாலின் என்று தனது பேச்சை ஆளுநர் தொடங்கியது.

ஆளுநர் உரையில், சித்திரை 1ஆம் தேதிக்கு பதிலாக, மீண்டும் தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல், சென்னையில் மழை காலத்தின்போது தண்ணீர் தேங்குவதை தடுக்க, நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அடியோடு அகற்றது தொடர்பான அறிவிப்பும் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும் ஆளுநர் உரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல், ஆட்சி அமைந்ததும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு, தற்போது ஏற்பட்டுவரும் ஒமைக்கிரான் பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநர் பேசவுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் உரை முடிந்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரை கொண்ட அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வர்.

அதன்படி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, எதிர்கட்சியினர், ஆளுங்கட்சியினர் பேச வாய்ப்பளிக்கப்படும், இறுதி நாளில் எதிர்கட்சிகளின் கேள்விகள், குறைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிலுரையின் மூலம் பதில் கொடுப்பார். முதல்வரின் பதிலுரையிலும் முக்கியமான அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருப்பதால் இந்த கூட்டத் தொடரை அதிக நாட்கள் நடத்தாமல் 2 நாட்களிலேயே முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

Also Read | TN Assembly Session 2022 LIVE: சட்டமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு திட்டம்

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget