மேலும் அறிய

தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் வக்கீல் சண்முகசுந்தரம்.. கடந்து வந்த பாதை என்ன?

மாநிலங்களவை உறுப்பினர், இங்கிலாந்து நீதிமன்றத்தில் பணியாற்றியவர் என்ற பல்வேறு முகங்களுக்குச் சொந்தமானவர் சண்முகசுந்தரம். தமிழகத்தின் புதிய அரசு,  தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை தேர்வு செய்தது ஏன்? நீதித்துறையில் சண்முகசுந்தரம் கடந்து வந்த பாதை என்ன? பார்க்கலாம்

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் அரசு தொடர்பான அதிகாரிகள் மாற்றம் அதிரடியாக நடந்து வருகின்றன. தலைமைச் செயலாளர்  முதல் சென்னையின் ஆணையர் வரை பலர் மாறுதலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகம் கொரோனாவின் தீவிரத்தில் சிக்கியுள்ள நிலையில் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள் கொரோனாவுக்கு எதிரான போரை வேகமெடுக்கச் செய்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் வக்கீல் சண்முகசுந்தரம்.. கடந்து வந்த பாதை என்ன?

1953-இல் பிறந்த சண்முகசுந்தரத்தின் தந்தையான ராஜகோபாலும் ஒரு வழக்கறிஞர்தான். திராவிட பற்றாளரான ராஜகோபாலின் நீதிமன்ற தாக்கம் சண்முகசுந்தரத்தையும் தூண்டியது. அந்த தாக்கமே நீதித்துறையை நோக்கி ஓட வைத்தது. தந்தை ராஜகோபாலைப்போலவே சட்டம் முடித்த சண்முக சுந்தரம் அரசு வழக்கறிஞராக வளர்ந்தார். வக்கீல் சண்முகசுந்தரம். இந்த பெயர் தமிழக அரசியலில் மிக முக்கியமான பெயர். வழக்கு, தாக்குதல், போராட்டம் என சண்முகசுந்தரத்தின் நீதிமன்ற வாழ்க்கை மிகவும் பரபரப்பானவை. 1995-ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீவிரமாக இருந்தார் சண்முகசுந்தரம்.

டான்சி நிலத்தை ஜெயலலிதா வாங்கியது தொடர்பான ஆவணங்களை தனது வீட்டில் தயாரித்துக்கொண்டு இருந்தபோது அதிரடியாக அவர் வீட்டுக்குள் நுழைந்த வெல்டிங் குமார் தலைமையிலான ரவுடி கும்பல் சண்முகசுந்தரத்தை கொடூரமாக தாக்கியது. கத்தி, கம்பி என பல ஆயுதங்களால் தாக்கப்பட்ட சண்முகசுந்தரம் ரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குப்பின்னான தீவிர சிகிச்சைக்கு பின் சண்முகசுந்தரம் உயிர் பிழைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் என்ற பல்வேறு அரசியல் தலைவர்களும் சண்முகசுந்தரத்தின் அதிரடி நடவடிக்கைகளையும், அவர் மீதான தாக்குதல் குறித்தும் குறிப்பிட்டு பேசியுள்ளனர். 


தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் வக்கீல் சண்முகசுந்தரம்.. கடந்து வந்த பாதை என்ன?

அவரின் நீதிமன்ற வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால், 1977-ஆம் ஆண்டு வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்ட சண்முகசுந்தரம்,1989- 1991 வரையிலான காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் கூடுதல் வழக்கறிஞராக இருந்தார். பின்னர்தான் அவர் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர் 1996-2001ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். இந்தக்காலக்கட்டத்தில் நூற்றுக்கணக்கான குற்ற வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகளில் வாதாடி தள்ளினார் சண்முகசுந்தரம்.

2002-2008-ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வக்கீல் சண்முகசுந்தரம்,  2015-2017-இல்  சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். ஒன்று இரண்டு அல்ல, சண்முகசுந்தரத்தின் நீதிமன்ற அனுபவம் நீளமானவை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர். மனித உரிமை மீறல் விவகாரங்களில் சண்முகசுந்தரத்தின் குரல் உயர் நீதிமன்றம் மட்டுமின்றி உச்சநீதிமன்றத்திலும் ஒலித்தது.


தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் வக்கீல் சண்முகசுந்தரம்.. கடந்து வந்த பாதை என்ன?

ஐநா சபைக்கூட்டம், சர்வதேச கருத்தரங்கு என இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்கு பறந்த சண்முகசுந்தரம் இந்தியாவின் குரலை தீர்க்கமாக பதிவு செய்தவர். பிரிட்டிஷ் கவுன்சில் மூலம்  பிரிட்டனில் கிரிமினல் சட்ட மேம்பாடு குறித்து பயின்றவர். நூற்றுக்கணக்கான வழக்குகள், நீண்ட சட்ட அனுபவம் என சண்முக சுந்தரத்தின் நீதிமன்ற அனுபவத்தை வைத்தே தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக அவரை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Watch video : கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ
கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ
Breaking Tamil LIVE: 2019-ஆம் ஆண்டை விட 25 சீட்டுகள் கூடுதலாக கிடைக்கும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Breaking Tamil LIVE: 2019-ஆம் ஆண்டை விட 25 சீட்டுகள் கூடுதலாக கிடைக்கும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
PM Modi :
"எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைச்சு..முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க" பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை!
Crime: பவாரியா கும்பல் வழக்கில் திடீர் திருப்பம் : குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு.
Crime: பவாரியா கும்பல் வழக்கில் திடீர் திருப்பம் : குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு.
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Modi  : மோடியின் வெறுப்பு பேச்சுSchool Re-Union : நிஜத்தில் 96 RE-UNIONMiss Koovagam 2024 :  திருநங்கைகள் RAMP WALK கண் கவர் உடையில் அசத்தல் மிஸ் கூவாகம் 2024 யார்?Kallazhagar Madurai  : குலுங்கிய மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் வாராரு வாராரு அழகர் வாராரு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch video : கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ
கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ
Breaking Tamil LIVE: 2019-ஆம் ஆண்டை விட 25 சீட்டுகள் கூடுதலாக கிடைக்கும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Breaking Tamil LIVE: 2019-ஆம் ஆண்டை விட 25 சீட்டுகள் கூடுதலாக கிடைக்கும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
PM Modi :
"எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைச்சு..முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க" பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை!
Crime: பவாரியா கும்பல் வழக்கில் திடீர் திருப்பம் : குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு.
Crime: பவாரியா கும்பல் வழக்கில் திடீர் திருப்பம் : குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு.
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Guru Peyarchi 2024: குருபார்க்க கோடி நன்மை! ஏன் அவ்வாறு சொல்லப்படுகிறது? புராணம் சொல்வது இதுதான்!
குரு பார்க்க கோடி நன்மை! ஏன் அவ்வாறு சொல்லப்படுகிறது? புராணம் சொல்வது இதுதான்!
Edappadi Palaniswami : 'மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் கருத்து’ பாஜக எதிர்ப்பை கைவிடுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?
Edappadi Palaniswami : 'மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் கருத்து’ பாஜக எதிர்ப்பை கைவிடுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?
Guru Peyarchi 2024 : ’வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா?’ ஆலங்குடி செல்லுங்கள் குருபகவான் ஆசி பெறுங்கள்..!
Guru Peyarchi 2024 : ’வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா?’ ஆலங்குடி செல்லுங்கள் குருபகவான் ஆசி பெறுங்கள்..!
Embed widget