மேலும் அறிய

Gold Price: அதிர்ச்சி! வரும் நாட்களில் தாறுமாறாக உயரப்போகும் தங்கம் விலை - காரணம் இதுதான்!

தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து உயரும் என்று தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க பொருட்களில் ஒன்றாக தங்கம் உள்ளது. தங்க வர்த்தகமானது உலகம் முழுவதும் பில்லியன் டாலர் மதிப்பில் நடைபெற்று வருகிறது. தங்க வர்த்தகத்தை பொறுத்தவரை தவிர்க்க முடியாத நாடாக திகழ்வது இந்தியா ஆகும்.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை:

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தின் மீதான மோகமும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. பெரிய கோடீஸ்வரர்களுக்கு ஆடம்பர பொருளாக தங்கநகைகளை கருதினாலும், சாமனிய, நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது அத்தியாவசிய பொருளாக உள்ளது. அவர்களது அவசர காலத் தேவைக்கு கைகொடுக்கும் பொருளாக தங்கம் உள்ளது.

ஆனால், 2000த்திற்கு பிறகே இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இந்தியாவில் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த சூழலில், கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை சாமானிய மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உச்சத்தை நோக்கிச் சென்று வருகிறது.

வரியை குறைத்தும் கட்டுக்குள் வராத விலை:

இதன்காரணமாக, கடந்த நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் குறைப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனால், பட்ஜெட் தாக்கலுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு குறைந்த தங்கம் விலை அதன்பின்பு மீண்டும் உச்சத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் சுமார் ரூபாய் 56 ஆயிரத்தில் விற்பனையாகி வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கிச் செல்லும் என தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தகவல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்தில், ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் வைப்பு நிதியில் இருந்து நிதியை எடுத்து தங்கமாக மாற்றி வருகின்றனர்.

ஏன் இவ்வளவு உயர்வு?

அமெரிக்காவின் மத்திய வங்கியும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. உலக பொருளாதாரம் பின்னடைவுக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதாலும், பல நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதாலும், முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களின் முதலீடுகளை தங்கமாக மாற்றி வருகின்றனர். இது தொடர்ந்து கொண்டே இருப்பதால் வரும் நாட்களிலும் தங்கம் விலை உச்சத்திற்குச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதார சூழல் மோசமாகி இருப்பதை பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவது மூலமே நாம் அறிய முடியும். இதன் காரணமாக, பலரும் பாதுகாப்பான முதலீட்டிற்காக தங்கம் பக்கம் திரும்பியுள்ளனர். இருந்தாலும் இந்தியா போன்ற நாட்டில் சாமானியரின் அத்தியாவசிய தேவையாக மாறியிருக்கும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget