மேலும் அறிய

விழுப்புரம் : வண்டல் மண் அள்ளப்படுவதை கண்டித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

விழுப்புரம் அருகே ஏரியில் அளவுக்கு அதிகமாக வண்டல் மண் அள்ளப்படுவதை கண்டித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

விழுப்புரம்: ஜானகிபுரத்தில் இருந்து வளவனூர் வழியாக புதுச்சேரி சென்று தஞ்சாவூரை இணைக்கும் தேசிய புறவழிச்சாலை பணிகள் கடந்த 6 மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்பணிகளுக்காக விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் ஏரி பகுதியில் இருந்து அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் ஏரி பகுதியில் இருந்து 6 அடி ஆழத்திற்கு மட்டுமே பள்ளம் தோண்டி வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கான ஒப்பந்ததாரர்கள் விதியை மீறி 20 அடிக்கும் மேலாக ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மண் எடுத்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் குற்றம்சாட்டினர்.


விழுப்புரம் : வண்டல் மண் அள்ளப்படுவதை கண்டித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

 மேலும் அனுமதிக்கப்பட்ட அளவினை மீறி ஏரியில் இருந்து மண் அள்ளுவதை பார்த்த ஆனாங்கூர் கிராம விவசாயிகள், பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆனாங்கூர் கிராம விவசாயிகள், அந்த ஏரி பகுதிக்கு திரண்டு சென்று அங்கு மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏரியில் விதியை மீறி அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் அள்ளப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.


விழுப்புரம் : வண்டல் மண் அள்ளப்படுவதை கண்டித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆனாங்கூர் ஏரி பாசனத்தை நம்பி 1,500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் உள்ள நிலையில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வண்டல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிப்படையும் என்றும் இதே நிலைமை நீடித்தால் வரும்காலங்களில் ஏரி பாசனம் மூலம் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

இதையடுத்து இதுபற்றி பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் அளித்தனர். அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு நேரில் வந்து, இதுசம்பந்தமாக உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget