மேலும் அறிய

Ponmudi ED Raid: அமலாக்கத்துறை பிடியில் பொன்முடி, கௌதம் சிகாமணி?.. சிக்க வைத்த வழக்கு இதுதானாம்..!

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌவுதம் சிகாமணி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கான காரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌவுதம் சிகாமணி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கான காரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை சோதனை:

தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சரின் வீடு, அலுவலகம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணியின் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவப்படையினரின் உதவியுடன் 7 பேர் கொண்ட குழு, சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் அமைச்சருக்கு சொந்தமான 5 இடங்களிலும், அவருக்கு சொந்தமான சூர்யா கல்வி குழும கல்லூரிகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வெளிநாடு முதலீடு தொடர்பான நடவடிக்கை?

சோதனையின் தொடக்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக கௌதம் சிகாமணி வெளிநாட்டில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை தான் இது என கூறப்பட்டது. ஆனால், இதையடுத்து வெளியான தகவல்கள் வேறுவிதமாக உள்ளன.

28 கோடி மோசடி?

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்தது மூலமாக 28 கோடிக்கும் மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விழுப்புரத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.  இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளது. வழக்கமாக பணமோசடி வழக்குகள் தொடர்பான விசாரணையை மட்டுமே அமலாக்கத்துறை மேற்கொள்ளும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு பதிந்த வழக்கில் இடம்பெற்றுள்ள குற்றப்பிரிவுகளின் அடிப்படையில் பொன்முடி வீட்டில் தற்போது அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்ற நோக்கிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அன்றே சொன்ன அண்ணாமலை..!

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைபொன்முடி  தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கொண்டு அரசு கருவூலத்திற்கு 28.4 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். திமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட என்.கே.கே.பி .ராஜா மற்றும் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்,  தமிழக அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிநீக்கம் செய்வாரா அல்லது செந்தில் பாலாஜியை பாதுகாப்பது போல் பொன்முடியையும் பாதுகாப்பார்களா? “ என கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் தான், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget