மேலும் அறிய

குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்

புதுச்சேரி- கடலூர் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிதாக 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மரக்காணம் முதல் கூனிமேடு வரை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

புதுச்சேரி - கடலூர் இடையே புதிதாக 6 வழிச்சாலை

புதுச்சேரி- கடலூர் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிதாக 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மரக்காணம் முதல் கூனிமேடு வரை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலை மூலம் கடலூருக்கு புதுச்சேரிக்குள் செல்லாமல் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக விரைவாக செல்ல முடியும். இதனால் புதுச்சேரி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், விபத்துகளும் குறையும்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கடற்கரை சாலை தரமானதாக அமைக்கப்பட்டது. இதனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய பெரும்பாலான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்றது. இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை மார்க்கத்தில் வாகன நெரிசலும் நாளுக்குநாள் அதிகரித்தது. மேலும் இந்த சாலையில் புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் வரையில் பல இடங்களில் வளைவுகள் இருந்தது.

இதுபோன்ற வளைவுகள் மற்றும் வாகன நெரிசல்களால் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துக்களால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வந்தன. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வளைவுகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் இருந்த மகாபலிபுரம் முதல் புதுவை மாநிலம் வரையிலான இசிஆர் சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடந்த 2016ம் ஆண்டு முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

‘NH 133 அழகு’

அதை தொடர்ந்து இந்த சாலைக்கு ‘NH 133 அழகு’ என தேசிய நெடுஞ்சாலை துறை பெயரிட்டு அங்கு 4 வழிச்சாலை அமைப்பதற்கான இடங்களையும் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தியது. மேலும் சாலை விரிவாக்கம் தொடர்பாக மகாபலிபுரம் முதல் செங்கல்பட்டு மாவட்டம் முகையூர் வரையில் முதல் கட்டப்பணிகளும், முகையூர் முதல் மரக்காணம் வரை 2ம் கட்ட பணிகளும், மரக்காணம் முதல் புதுவையின் அரியூர் வரையில் 3ம் கட்ட பணிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பே முதல்கட்ட பணிகள் தொடங்கிது.

முகையூர் முதல் மரக்காணம் வரையிலான இரண்டாம் கட்ட பணிக்கான வேலை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மரக்காணம் பகுதியில் பக்கிங்காம் கால்வாயில் நான்கு வழி சாலைக்கான உயர் மட்ட மேம்பாலம் அமைத்தல், மற்றும் முக்கிய கிராமங்களுக்கு இடையில் சாலையின் மத்தியில் மேம்பாலம் கட்டுதல், 4வழி சாலை அமைத்தல் மற்றும் 4வழி சாலையின் இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

மரக்காணம் பகுதியில் 60 சதவீதம் வரையில் முடிந்த நிலையில் மரக்காணம் முதல் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட அரியூர் வரை 46 கி.மீ. தூரத்திற்கு புதிதாக சாலை அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வேலை தொடங்கியுள்ளனர். இதில் கூனிமேட்டில் இருந்து அரியூர் வரை 31 கி.மீ தூரத்துக்கு 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய இசிஆர் சாலை வழியாக 4 வழி சாலை செல்லாமல் கூனி மேட்டின் மேற்கு பகுதியில் இருந்து அரியூர் வரை 31 கி.மீ. தூரத்திற்கு 6 வழி பசுமை சாலை அமைப்பற்கான இடங்கள் கையகப்படுத்தப்பட்டன.

அதிவேக பறக்கும் சாலையாக அமைக்கும் பணிகள்

இந்த சாலை அதிவேக பறக்கும் சாலையாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் 100 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லலாம். இந்த பறக்கும் வழி சாலை செல்லும் பகுதியில் கிராமப்பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களோ அல்லது விபத்துக்களை ஏற்படுத்த கூடிய கால்நடைகள் சாலையின் குறுக்கே செல்ல முடியாத வகையில் சாலையின் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கூனிமேடு முதல் அரியூர் வரை 31 கி.மீ. தூரத்திற்கு 6 வழி சாலை அமைக்கும் பணி முடிந்தால் புதுச்சேரிக்குள் வாகன நெரிசல் வெகுவாக குறைக்கப்படும். தற்போது கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் ECR வழியாக வரும் வாகனங்கள் புதுச்சேரி நகரத்திற்குள் சென்றுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த 6 வழி சாலை முடிந்தால் அரியூர் வழியாக செல்லும் வாகனங்கள் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்படும். இதன் மூலம் புதுச்சேரி நகரத்திற்குள் செல்லாமல் கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக செல்லலாம். இதனால் பயண நேரம் மீதம் ஆகும்.

அதேபோல், இந்த சாலை அமைக்கப்படும் பகுதியில் இருந்து மயிலம் வழியாக 15 கிலோ மீட்டருக்குள் திண்டிவனம் பகுதிக்கு செல்ல முடியும். சென்னை மற்றும் மரக்காணம் மார்க்கமாக விழுப்புரத்திற்கு செல்லக்கூடிய வாகனங்களும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மிக விரைவாக செல்ல முடியும். இதேபோல் இந்த சாலை வழியாக மரக்காணத்தில் இருந்து திண்டிவனத்திற்கு அதிவேகமாக செல்ல முடியும். இந்த சாலையால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதுடன், பயண நேரம் குறைக்கப்படுவதுடன் விபத்துகளும் தவிர்க்கப்படும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
Embed widget