மேலும் அறிய

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஊழல் புகாரில் சிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்? விரைவில் விசாரணை!?

அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் குறித்த விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் குறித்த விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் பணிபுரிந்த நான்கு ஐஏஎஸ் அலுவலர்கள் உள்பட 12 அரசு அலுவலர்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தமிழ்நாடு அரசின் அனுமதியை நாடியுள்ளது.

இந்த அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ஊழல் தடுப்பு அலுவலர்கள் கூறுகின்றனர். அனுமதி கோரிய கடிதம் கடந்த நவம்பர் மாதம் எழுதப்பட்டிருந்தாலும், தற்போதே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், கவனிக்கத்தக்க வேண்டியது, இவர்களை விசாரிக்க அரசு இன்னும் அனுமதிதரவில்லை என்பதுதான்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், "குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவி 161இன் கீழும் 164 பிரிவின் கீழும் சந்தேக வளையத்தில் இருந்த மற்றவர்கள் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு அலுவலர்களை விசாரிக்க வேண்டியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் சென்னை ஆணையர் ஜி. பிரகாஷ், முன்னாள் கோயம்புத்தார் ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் சந்தேக வளையத்தில் உள்ளனர். சென்னையின் முன்னாள் துணை ஆணையர்கள் கந்தசாமி, மதுசூதன் ரெட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை பொறியாளர், முதன்மை தலைமை பொறியாளர் எம். புகழேந்தி, ஓய்வு பெற்ற சிஎச்ஒ செந்தில்நாதன் ஆகியோரை விசாரிக்க ஊழல் தடுப்பு பிரிவினர் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.

அந்த கடிதத்தில், "குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 161 மற்றும் 164இன் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில், மேல் குறிப்பிடப்பட்ட அரசு அலுவலர்கள் சதி வேலையில் ஈடுபட்டு அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் இவர்களை கூடுதல் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்க அனுமதி கோரியுள்ளோம். 

விசாரணையை முடித்து இந்த அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருக்கிறது. 2021 ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி முதல் 10 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

13.6 கோடி ரூபாய் மதிப்பில் அம்பத்தூரில் சாலையை வலுப்படுத்தி, அமைத்ததில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. கணிக்கப்பட்ட அளவிலிருந்து அதிகமான விலைக்கு ஏலம் விடப்பட்டது தெரிய வந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
Embed widget