மேலும் அறிய

கடலூர் மக்களுக்கு விடியல் ! வீராணம் ஏரியில் வெள்ள தடுப்பு பணிகள் தீவிரம்

கடலூர்: வீராணம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் 63.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான வெள்ள தடுப்பு பணி துவக்கம்.

கடலூர்: காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் 63.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான வெள்ள தடுப்பு பணிகளை அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார் அமைச்சர் பன்னீர்செல்வம்.

வீராணம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் வெள்ள தடுப்பு பணி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி டெல்டா பாசனம் மற்றும் சென்னை குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் நீர்வளத் துறை மூலம் வீராணம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் விரிவான வெள்ள தடுப்பு பணிகளுக்கு அரசு 63.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த திட்ட நிதி மூலம் கூடுதல் நீர் போக்கி மதகு கட்டுதல், வெள்ளியங்கால் ஓடை சேத்தியாத்தோப்பு பாழ் வாய்க்கால் துார்வாரி சீரமைக்கும் பணி மற்றும் டெல்டா பாசன வாய்க்கால்கள் துார் வரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டி பணிகள் துவக்க விழா வீராணம் ஏரி திட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி மூலம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி தாலுகா பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் டெல்டா பாசன வசதி பெறுகிறது. கீழணை தண்ணீர் மூலம் சேத்தியாதோப்பு பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் பாசன வசதி கிடைக்கிறது. கடந்த 2024ம் ஆண்டில் வீராணம் ஏரிக்கு அதிக அளவாக 30 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் வரத்து இருந்ததால் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமங்களில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனை தடுக்கும் வகையில் அரசு விரிவான வெள்ள தடுப்பு பணிக்கு 63.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி நடக்கிறது. இந்த திட்டத்தில் வீராணம் ஏரியில் கூடுதல் நீர் போக்கி மதகு அமைக்க 29 கோடி ரூபாய் சேத்தியாத்தோப்பு பாழ்வாய்க்கால் துார்வாரி சீரமைக்கும் பணிக்கு 13. 50 கோடி ரூபாய். வீராணம் ஏரியில் உள்ள பழுதடைந்த இரும்பு ஷட்டர் சீரமைப்பு மற்றும் வெள்ளியங்கால் ஓடை துார்வாரி சீரமைக்கும் பணிக்கு 21 கோடி ரூபாய் என நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வீராணம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும். வீராணம் ஏரி சுற்றுலா தலமாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பூங்கா திட்டம் செயல்படுத்த உள்ளது. இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். நிகழ்ச்சியில் நீர் ஆதாரத்துறை சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி இன்ஜினியர்கள் கொளஞ்சிநாதன் படைக்காத்தான் சிவராஜ் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget