மேலும் அறிய

தமிழ்நாட்டிற்கு ரெம்டெசிவிர் அதிகமாக ஒதுக்கியதற்கு, மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு வரும் ரெம்டெசிவிர் மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தற்காக மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவில் மிகவும் அதிகமாகி வருகிறது. இதனால் பல பகுதிகளில் படுக்கை வசதியில்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். அதேபோல பலர் சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் அரசு வழங்கும் மையத்தில் கூட்டமாக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது. இதனால் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு ஒருநாளைக்கு 7000 ரெம்டெசிவிர் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த ரெம்டெசிவிர் மருந்துகளின் அளவை உயர்த்தியதற்காக நன்றி. மேலும்  கொடிய பெருந்தொற்றினை எதிர்கொண்டிருக்கும் சூழலில் குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் மற்றும் உபகரணங்களின் தேவை இன்றியமையாதது" எனத் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டிற்கு ரெம்டெசிவிர் அதிகமாக ஒதுக்கியதற்கு, மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக அரசு ரெம்டெசிவிர் வழங்கும் மையங்களில் மக்கள் கூட்டமாக கூடி வந்தனர். இதனை தடுக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு ரெம்டெசிவிர் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. அத்துடன் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட புதிய கொரோனா சிகிச்சை நெறிமுறைகளில் ரெம்டெசிவிர் பயன்பாடு குறித்து எதுவும் இடம்பெறவில்லை. ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை என்று பல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR LIVE Score: கிழியும் ராஜஸ்தான் பவுலிங்; சிக்ஸர் மழையில் சதத்தை எட்டிய சுனில் நரைன்!
KKR vs RR LIVE Score: கிழியும் ராஜஸ்தான் பவுலிங்; சிக்ஸர் மழையில் சதத்தை எட்டிய சுனில் நரைன்!
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sivapriyan Interview | Jothimani | ’’மோடி பற்றி பேசினால்..விஜயபாஸ்கருக்கு சிறை தான்’’ ஜோதிமணி ATTACKH Raja speech | ’’ஸ்டாலின் உயிரை காப்பாற்றியவர் மோடி’’ உடைத்து பேசிய ஹெச்.ராஜாSelvaperunthagai Speech | ’’மோடி சொன்னாரு..எடப்பாடி முடிச்சாரு’’செல்வப்பெருந்தகை விளாசல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR LIVE Score: கிழியும் ராஜஸ்தான் பவுலிங்; சிக்ஸர் மழையில் சதத்தை எட்டிய சுனில் நரைன்!
KKR vs RR LIVE Score: கிழியும் ராஜஸ்தான் பவுலிங்; சிக்ஸர் மழையில் சதத்தை எட்டிய சுனில் நரைன்!
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
ஆஹா என்ன வரிகள் 3:
ஆஹா என்ன வரிகள் 3: "யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு" காதல் துணையை இழந்த ஆணின் வலி!
Embed widget