மேலும் அறிய

இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?

வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழ்நாடு, கேரளா அரசுகள் இணைந்து கொண்டாடுகின்றன.  

எல்லோருக்கும் எல்லாம் என்பது திமுகவின் கொள்கை என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழ்நாடு, கேரளா அரசுகள் இணைந்து கொண்டாடுகின்றன.  கேரளா மாநிலம் வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜய் ஆகியோர் திறந்து வைத்தனர். பெரியார் நினைவக திறப்பு விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சமூக நீதி வரலாற்றின் முதல் வெற்றி விழா நகரமான வைக்கத்தில் இரு மாநில அரசுகள் இணைந்து விழாவை கொண்டாடி வருகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடக எழுத்தாளர் தேவனூரு மகாதேவவுக் வழங்கப்பட்டது. மைசூருவை சேர்ந்த எழுத்தாளர் தேவனூரு மகாதேவவுக்கு வைக்கம் விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில் வைக்கம் விருது வழங்கப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியில் பேசிய கேரள முதலவர் பினராயி விஜயன் “சமூக நீதி காவலராக திகழ்ந்தவர் பெரியார். மதம், கடவுளின் பெயரில் மக்களுக்கு கல்வி தடுக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்தார் பெரியார்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய மண்ணில் பெரியார் கொண்டாடப்படுவதுதான் அவரது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை வரலாற்று பெருமையாக கருதுகிறேன். பெரியார் நூற்றாண்டு தொடக்க விழாவை ஏற்பாடு செய்து எங்களை பினராயி விஜயன் அழைத்தார். இந்திய அளவில் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராய் பினராயி விஜயன் விளங்குகிறார். 

வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ அதைப்போலவே பெரியார் நினைவகமும் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. வைக்கம் பெரியார் நினைவகத்தை சிறப்பாக அமைத்துள்ள பொதுப்பணித்துறை  அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுகள். 

பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் இந்நாள், வரலாற்றில் பொன்நாள். கேரளாவுக்கு வரும் அனைவரும் வைக்கம் பெரியார் நினைவகத்தை பார்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறை அறிய வேண்டும். கர்நாடக மாநிலத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய எழுத்தாளர் தேவனூரு மகாதேவவுக்கு வைக்கம் விருது வழங்கப்பட்டுள்ளது. 

ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து ஒரு பெரிய சமூகத்தை மாற்றிய வரலாறு தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் இல்லை. கேரள காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று 5 மாத காலம் வைக்கத்தில் தங்கி பெரியார் போராட்டம் நடத்தினார். கேரளாவில் 75 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் பெரியார். பெரியாருக்கு எதிரான தடை உத்தரவை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு வாபஸ் பெற்றதை அறிந்து மக்கள் மகிழ்வர் என எழுதினார் காந்தி. 1925ல் வைக்கம் போராட்ட வெற்றி விழாவில் பங்கேற்க பெரியார், நாகமைக்கு அழைப்பு வந்தது. வைக்கம் போராட்ட வெற்றி விழாவுக்கு தலைமை ஏற்க மறுத்தாலும் பெரியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 

பெரியாரின் வைக்கம் போராட்டம் மிகவும் முக்கியமானது என அம்பேத்கர் குறிப்பிட்டார். வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம். பெரியாரின் போராட்டம் காரணமாகவே கோயிலுக்குள் நுழையும் அனைவரையும் பாதுகாக்க 1939ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 

வைக்கம் போராட்டத்தில் வென்ற பெரியாருக்கு வைக்கம் வீரர் என பட்டம் சூட்டினார் தமிழ்த் தென்றல்  திருவிக. 

100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறி இருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் வெகுதூரம் முன்னேறி செல்ல வேண்டியுள்ளது. பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர வேண்டும். வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்றவர்களின் பட்டியல் நீளமானது. யாரையும் தாழ்த்திப்பார்க்காத சமத்துவ சிந்தனை மக்கள் மனதில் மலர வேண்டும். 

எல்லோருக்கும் எல்லாம் என்பதை சமத்துவ கொள்கையாக மட்டுமல்லாமல், ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் அறிவித்துள்ளோம். வைக்கம்  போராட்ட விழாவை கொட்னாடுவது பெரியாரை போற்ற மட்டுமல்ல. அவர்கள் காட்டிய வழியில் பயணிப்பதற்காகவும்தான். எந்த விலை கொடுத்தாலும் சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
Putin Vs Ukraine: “பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
“பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
ஆல்கஹால், கஞ்சா, பெண் எல்லாமே போதை.. ஓபனாக பேசிய ஜெயிலர் பட வில்லன்!
ஆல்கஹால், கஞ்சா, பெண் எல்லாமே போதை.. ஓபனாக பேசிய ஜெயிலர் பட வில்லன்!
Embed widget