மேலும் அறிய

Madurai Jallikattu Ground: தமிழர் பண்பாட்டை அந்த கால ஆளுநர்கள் நன்கு அறிந்திருந்தனர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

மதுரை அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரை கிராமத்தில் ரூ.62.78 கோடி செலவில்  கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழர் என்ற அடையாளத்தோடு ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையோடு நடத்துவோம் என மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரை கிராமத்தில் ரூ.62.78 கோடி செலவில்  கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, எ.வ.வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலரும், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வீரர்களும், தீரர்களும் வாழும் மதுரை மண்ணில் ஏறு தழுவுதல் விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சங்கம் வளர்த்த மதுரையில் மாபெரும் ஏறு தழுவுதல் மைதானம் திமுக அரசால் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமைந்திருக்கும் இந்த பண்பாட்டு சின்னம் தமிழகத்தின் மரபின் தொடர்ச்சி. சிந்து சமவெளி நாகரிகத்தில் திமில் கொண்ட காளைகளின் முத்திரை இருக்கிறது. 

திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 3 முக்கிய கம்பீர சின்னங்களை ஏற்படுத்தியுள்ளோம். மதுரைக்கு அருகில் கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூலகம் ஆகியவை தொடர்ந்து கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தை மாதம் தொடங்கி பொங்கலுக்கான முதல் 3 நாட்கள் அரசு கருவூலம் தொடங்கி மற்ற அனைத்து அலுவலகத்தையும் மூட வேண்டுமென ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் ஆளுநர்கள் அறிவித்தனர். தமிழர்களின் பண்பாட்டை சரியாக அறிந்தவராக அந்த காலத்து  ஆளுநர்கள் இருந்தனர். இந்த பண்பாட்டு திருவிழா உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும் என்றே இந்த அரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

கலைஞர் கருணாநிதிக்கு ஏறு தழுவுதல் மீது தனிப்பிரியம் உண்டு. அதனால் தான் தன்னுடைய மூத்த பிள்ளையான முரசொலியின் சின்னமா ஏறுதழுவுதல் காட்சியை வைத்தார். 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் ஏறுதழுவுதல் போட்டியை நடத்தியவர் கலைஞர். 2006 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போட்டிகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்த போது பாதுகாப்பாக போட்டியை நடத்துவோம் என உறுதியளித்து அனுமதி பெற்றார். 2007 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தபோது தடையை நீக்க வலுவான வாதங்கள் வைத்து அனுமதி பெற்றது திமுக அரசு காலத்தில் தான். 

சாதி பிளவுகளும், மத வேறுபாடுகளும் தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையோடு நடத்துவோம் என இந்த தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன்” என தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget