![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
காலை உணவுத் திட்டம் மற்றும் மக்களுடன் முதல்வர் ஆகிய திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
![எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு Chief Minister Stalin's letter to MP, MLA for participate to breakfast scheme எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/d5c41344444a04869c87fe1ce70ec0191720107499367572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜூலை 11, 15 ஆகிய தேதிகளில் காலை உணவுத் திட்டம் மற்றும் மக்களுடன் முதல்வர் ஆகிய திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
11-7-2024 மற்றும் 15-7-2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர்” மற்றும் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள அழைப்பு விடுத்து அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 4-2-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியிலும் 15-7/2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவற்றை தொடங்கி, வைக்கவுள்ளார். அதேபோன்று அன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர் பெருமக்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள். இந்நிலையில் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் தன்னால் 18:12.2023 அன்று தொடங்கப்பட்ட 'மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. என்றும், அதன்மூலம் மொத்தம் 974 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்திட திட்டமிட்டு, வருகிற 11-7-2024 அன்று தர்மபுரி மாவட்டத்தில் தான் அதனைத் தொடங்கி வைக்க இருப்பதாகவும், அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்பெருமக்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மக்களின் தேவைகளை நன்குணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் 11.07.2024 அன்று நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்களில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோன்று 15-9-2022 அன்று தன்னால் தொடங்கி வைக்கப்பட்ட "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" பொது மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவதாகவும் 40,351 மாணவ மாணவியர் பயனடைந்து வருகின்றனர் என்றும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்
அதேபோன்று, பல்வேறு ஆய்வுகளின் மூலமும் தமிழ்நாடு மாநில திட்டக் குழு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மதிப்பீடு செய்ததன் அடிப்படையிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதோடு சத்தான உணவினை வழங்குவதன் காரணமாக பள்ளிகளில் மாணவர்களின் வருகையும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதை கண்டு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருவதாக திட்டக்குழு தனது அறிக்கையில் காட்டியுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
11-7-2024 மற்றும் 15-7-2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 4, 2024
“மக்களுடன் முதல்வர்” மற்றும் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள அழைப்பு விடுத்து அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம்… pic.twitter.com/JqQ0qlpWnr
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)