மேலும் அறிய

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்துவதில் தீண்டாமையா? - தீட்சிதர்கள் மீது பெண் புகார்

மேலே ஏறி கோயிலின் விதிமுறைகளை மீறியதால் உங்களை சஸ்பெண்டு செய்து உள்ளோம்.கோவிலுக்குள் வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதோடு கணேஷ் தீட்சிதரை மற்ற தீட்சிதர்கள் தாக்கியதாகவும் புகார்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உலக புகழ் பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது. இந்த கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலை தீட்சிதர்களே நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கோயிலில் மேல் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் உள்ளிட்ட யாரும் சாமி தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் கட்டுப்பாடு விதித்திருந்தனர். 
 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்துவதில் தீண்டாமையா? - தீட்சிதர்கள் மீது பெண் புகார்
 
இந்த நிலையில் நேற்று காலை சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்த ஜெயசீலா (37) என்பவர் நடராஜரை தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த சில தீட்சிதர்கள் ஜெயசீலாவை கடுமையாக திட்டி, தாக்கி வெளியே அனுப்பி வைத்து உள்ளனர், இதுகுறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பின்னர் இந்த சம்பவம் குறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சிதம்பரம் காவல் துறையினர் புகாரின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர். 


சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்துவதில் தீண்டாமையா? - தீட்சிதர்கள் மீது பெண் புகார்
 
இதற்கிடையே சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கணேஷ் எனும் தீட்சிதர் (57). இவர் நேற்று முன் தினம் இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முயன்று உள்ளார். இதை பார்த்த அங்கு இருந்த தீட்சிதர்கள் ராஜசெல்வம், சிவசெல்வம், சபேசன் ஆகியோர் கணேஷ் தீட்சிதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தீட்சிதர்கள், கனகசபைக்கு மேல் ஏறி தரிசனம் செய்ய கூடாது. ஆனால் மேலே ஏறி கோயிலின் விதிமுறைகளை மீறிய காரணத்தால் உங்களை சஸ்பெண்டு செய்து உள்ளோம். இனி கோவிலுக்குள் வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதோடு கணேஷ் தீட்சிதரை மற்ற தீட்சிதர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்துவதில் தீண்டாமையா? - தீட்சிதர்கள் மீது பெண் புகார்
 
இதில் காயமடைந்த கணேஷ் தீட்சிதர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தீட்சிதர்கள் ராஜசெல்வம், சிவசெல்வம், சபேசன் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இது குறித்து கணேஷ் தீ்ட்சிதர் கூறுகையில், சமீபத்தில் நடந்த தீட்சிதர்கள் ஆலோசனை கூட்டத்தில், நடராஜர் கோயிலில் கனகசபைக்கு சென்று பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்துவதில் தீண்டாமையா? - தீட்சிதர்கள் மீது பெண் புகார்
 
இதனால் என்னை தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து சஸ்பெண்டு செய்துவிட்டனர். இருப்பினும், நான் கனகசபைக்கு சென்று தரிசனம் செய்ய முயன்றபோது தாக்கப்பட்டேன் என்றார்.சிதம்பரம் நடராஜர் கோயிலில் கணேஷ் தீட்சிதர், ஜெயசீலாவை தீட்சிதர்கள் அடுத்தடுத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
Embed widget