மேலும் அறிய

Sivashankar Baba: சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு; விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

சிவசங்கர் பாபா பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று சிபிசிஐடிக்கு மாற்றபட்ட நிலையில், விசாரணை அதிகாரிகளாக டிஎஸ்பி குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிவசங்கர் பாபா பாலியல் விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது தனியார் சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி. இந்த பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பயின்று வெளியேறி  மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும், அந்த மாணவிகள் சிவங்கர் பாபாதான் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டும், பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலரையும் கோபிகைகள் என்று மூளைச்சலவை செய்து அவர்களுடன் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

காஞ்சிபுரத்தை கலர்புரமாக மாற்றிய வானவில்!

இதையடுத்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் வலுவாக குரல் கொடுக்கத் தொடங்கினர். குற்றம்சாட்டிய மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரி சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மாணவிகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்ததால் கடந்த 11-ஆம் தேதி பாபாவை நேரில் ஆஜராகும்படி ஆணையம் உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா தான் உத்தரகாண்ட் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னால் ஆஜராக முடியாது என்றும் விளக்கம் அளித்திருந்தார். 


Sivashankar Baba: சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு; விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதும் மகாபலிபுரம் அனைத்து மகளிர்  காவல்துறையினர் 354, 355, 363, 365 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 15 புகார்கள் வந்ததாகவும் அதில் ஐந்து புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிவசங்கர் பாபாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருப்பதால் சிபிசிஐடிக்கு இந்த விசாரணை மாற்றப்படும் பட்சத்தில் எளிதாகக் வேறு மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தவும் கைது செய்யவும் எளிதாக இருக்கும்.. இந்த காரணத்தினால் தான் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளாக DSP குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளனர். 

World Blood Donor Day 2021: இன்று உலக ரத்த தான தினம் - வதந்திகள் vs உண்மைகள் மருத்துவர் விளக்கம்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Govinda: ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Actor Govinda: ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Suriya 44: கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
SBI Debit Card Charges: எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

CV Shanmugam: என்னாது! தேமுதிக வேட்பாளருக்கு பம்பரம் சின்னமா? உளறிய CV சண்முகம் | Cuddalore | DMDKNirmala Sitharaman : ”காசு இல்லப்பா..! அதான் தேர்தல்ல நிக்கல” நிர்மலா சீதாராமன் பகீர் | BJP | ModiGaneshamurthi Death :”கணேசமூர்த்தி மறைவு..” கதறி அழுத வைகோ.. தொண்டர்கள் உருக்கம் | Vaiko | MDMKJayalalitha daughter deepa :தேனி தொகுதியில் திடீர் ஜெயலலிதா மகள்! யாருடன் கூட்டணி? | Theni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Govinda: ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Actor Govinda: ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Suriya 44: கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
SBI Debit Card Charges: எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சு விட்ட இ.பி.எஸ்.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சு விட்ட இ.பி.எஸ்.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
Lok Sabha Election 2024: நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு - நடந்தது என்ன?
நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு - நடந்தது என்ன?
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
Embed widget