மேலும் அறிய

CM Stalin: காவிரி நீர் உரிமை - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த முக்கியமான தீர்மானங்கள்!

CM Stalin On Cauvery Issue: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Stalin On Cauvery Issue: காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வள அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

அனைத்துக் கட்சி கூட்டம்:

கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற கூட்டத்தில் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்,  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே. மணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் மற்றும் விசிக சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை:

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும்,  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது.

இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கர்நாடக அரசின் நடவடிகையை ஏற்க முடியாது:

தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை நான் தீர்மானங்களாக இப்பொழுது படிக்கின்றேன்:

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும்,  உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

3. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் உறுதியளித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive: 4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs Congress | ராகுல் அலை வீசுது..!மோடி - அமித்ஷா.. ஒத்து!ஹரியானாவில் சறுக்கும் பாஜக!Suresh Gopi vs Amit Shah | சுரேஷ் கோபி சர்ச்சை பேச்சு! பறிபோகும் அமைச்சர் பதவி?அதிருப்தியில் அமித்ஷாMamata Letter to Modi : ”15 நாள் தான் Time!”மோடிக்கு மம்தா பரபரப்பு கடிதம் பாலியல் வன்கொடுமை சம்பவம்Murugan Muthamzh Manadu : உலக முத்தமிழ் முருகன் மாநாடு..திமுக அரசு நடத்துவது ஏன்? பணிகள் தீவிரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive: 4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!
Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
Rahul Dravid:நல்ல சம்பளம் கொடுங்கள் நானே நடிக்கிறேன்.. மாஸ் காட்டிய ட்ராவிட்
Rahul Dravid:நல்ல சம்பளம் கொடுங்கள் நானே நடிக்கிறேன்.. மாஸ் காட்டிய ட்ராவிட்
Actor Nakul : நடுராத்திரி ஆணுறை வாங்கிவரச் சொன்னார்.. வாஸ்கோடகாமா பட உதவி இயக்குநர் வேதனை
நடுராத்திரி ஆணுறை வாங்கிவரச் சொன்னார்.. வாஸ்கோடகாமா பட உதவி இயக்குநர் வேதனை
தயங்கி நின்ற உக்ரைன் அதிபர்.. ஆரத்தழுவி கட்டியணைத்த பிரதமர் மோடி.. அடடே செம்ம!
தயங்கி நின்ற உக்ரைன் அதிபர்.. ஆரத்தழுவி கட்டியணைத்த பிரதமர் மோடி.. அடடே செம்ம!
Embed widget