மேலும் அறிய

Arudra Darshan 2023: சிவ ஆலயங்களில் கோலாகலமாக நடந்த ஆருத்ரா தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..!

தமிழகம் முழுவதுமுள்ள சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தின் திருமஞ்சன நிகழ்வு  சிறப்பாக நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர். 

தமிழகம் முழுவதுமுள்ள சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்வு  சிறப்பாக நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர். 

ஆருத்ரா தரிசனம் 

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் சிறப்பானது. சிவ பெருமானுக்கு உரியதாக கொண்டாடப்படும் இந்த நட்சத்திர நாளில் தான் சிவபெருமான் தன் ருத்ரதாண்டவத்தை நிகழ்த்தியதாக புராணங்கள் கூறுகின்றது.சில முனிவர்கள்  சிவ பெருமானுக்கு எதிராக வேள்வி நடத்தினர். அப்போது அவர்களது இல்லங்களுக்கு யாசகம் கேட்பவர் போன்று சென்றார்.  இதனையறிந்த முனிவர்கள் புலி, உடுக்கை, நாகம் போன்றவற்றை யாகத்தில் உருவாக்கி  அவற்றை சிவபெருமான் மீது  ஏவி விட்டனர். அவற்றை தனது அணிகலன்களாக ஆக்கிக் கொண்ட சிவபெருமான், முனிவர்கள் ஏவி விட்ட யானையை மிதித்து பாதாளத்தில் அழுத்தி, ஒரு காலை தூக்கி, தனது விஸ்வரூப தரிசனத்தை காட்டினார். 

இந்த சம்பவத்தால் மனம் திருந்திய முனிவர்கள் தங்களது ஆணவத்தை கைவிட்டு சிவ பெருமானிடம் சரணடைந்தனர். அதேசமயம் இந்த காட்சியை உலக மக்களும் காண வேண்டும் என முனிவர்கள் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டனர். அதன்  காரணமாக மார்கழி திருவாதிரை நாளில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. 

திருவாதிரை களி 

சேந்தனார் என்ற சிவபக்தர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளிக்காமல் சாப்பிடுவதில்லை என உறுதியாக இருக்கிறார். விறகு வெட்டி அதில் வரும் பணத்தை கொண்டு வாழும் அவருக்கு, ஒருநாள் மழையால் விறகு நனைந்ததால், அதனை விற்க முடியவில்லை. அப்போது சிவனடியார் ஒருவர் பசிக்காக அவரை நாடுகிறார். வீட்டில் எந்த பொருட்களும் இல்லாததால் இருப்பதை கொண்டு களி செய்து சிவனடியார் பசியை நந்தனார் போக்கினார். மறுநாள் கோவிலில் களியும், அதனுடன் வைக்கப்பட்ட கூட்டும் சிதறி கிடந்ததை கண்டு சேந்தனார் தனது பக்தியை சோதனை செய்யவே சிவபெருமான அடியாராக வந்ததை அறிந்து கொண்டார். இதனால் தான் திருவாதிரை நாளில் களி செய்து படைக்கப்படுகிறது. 

விமரிசையாக நடந்த ஆருத்ரா தரிசனம் 

நடப்பாண்டுக்கான மார்கழி திருவாதிரை விழா இன்று தமிழகம் முழுவதும் உள்ள சிவ ஆலயங்களில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதனைத் தொடர்ந்து  சிவபெருமானின் பஞ்ச சபைகளில் நடந்த ஆருத்ரா தரிசனத்தையும் ஏராளமான பக்தர்கள் நேரில் தரிசனம் செய்தனர்.

அதன்படி சிதம்பரம் (பொற்சபை), மதுரை (வெள்ளி சபை), திருநெல்வேலி (தாமிர சபை), குற்றாலம் (சித்திர சபை), திருவாலங்காடு (இரத்தின சபை)  ஆகிய பஞ்ச சபைகளிலும் சிவபெருமானுக்கு திருவாதிரை களி படைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் விழா கொண்டாடப்பட்டது. பஞ்ச சபைகளில் ஆருத்ரா தரிசனம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் , போடி சுப்பிரமணிய சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்களநாதர் கோயிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும். அதன்படி நேற்று திறக்கப்பட்டு 32 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
Gold Rate Today: காலையிலே ஹாப்பி! மீண்டும் 70 ஆயிரத்திற்கு கீழே சென்ற தங்கம் விலை
Gold Rate Today: காலையிலே ஹாப்பி! மீண்டும் 70 ஆயிரத்திற்கு கீழே சென்ற தங்கம் விலை
Top 10 News: உச்சநீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கேள்வி.. ஐநா-வை சந்திக்கும் இந்தியா - 11 மணி பரபரப்பு
Top 10 News: உச்சநீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கேள்வி.. ஐநா-வை சந்திக்கும் இந்தியா - 11 மணி பரபரப்பு
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Indias Neighbour Countries: சீனா, பாக்., மட்டும் தான் பிரச்னையா? 7 நாடுகளுடன் எல்லைகளை பகிரும் இந்தியா - உறவு எப்படி?
Indias Neighbour Countries: சீனா, பாக்., மட்டும் தான் பிரச்னையா? 7 நாடுகளுடன் எல்லைகளை பகிரும் இந்தியா - உறவு எப்படி?
Embed widget