மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Annamalai On DIG Suicide: ”காவல்துறையில் இதெல்லாம் இருக்கிறது“ - கோவை டிஐஜி மரணம் தொடர்பாக அண்ணாமலை சாடல்

கோவை சரக டிஐஜி  விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரிக்க  சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை சரக டிஐஜி  விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரிக்க  சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும்:

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ விஜயகுமாரின் தற்கொலை தூண்டப்பட்டதா என்பதை விசாரிக்க நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட வேண்டும். காவல்துறை உயரதிகாரிகள் யார் யாருடன்  விஜயகுமார் பேசினார் என்பதை விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் முழுமையாக ஆராயப்பட வேண்டும். முறையாக விசாரணை நடத்த வேண்டும். மக்களுக்காக உழைத்த அதிகாரிக்கு மன அழுத்தம் இருந்ததாக கூறி, கொச்சைப்படுத்தக்கூடாது. விஜயகுமார் குடும்பத்தில் ஒருவருக்கு குரூப்-ஏ பணி வழங்க வேண்டும். 

காலிப்பணியிடங்களை நிரப்புக:

காவல்துறையில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். காவல்துறையில் உள்ள அனைவருக்கும் பணி அழுத்தம் உள்ளது. காலி பணியிடங்களை நிரப்பினால் காவல்துறையினரின் பணி அழுத்தம் குறைந்துவிடும். காவல்துறையினருக்கு வாரம் ஒருநாள் ஓய்வு வழங்க வேண்டும்” என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

டிஐஜி தற்கொலை?

சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார், கடந்த ஜனவரி மாதம் தான் கோவை சரக டிஐஜி ஆக மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 7 ஆம் தேதி அவர் பதவியேற்றார். இந்நிலையில் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் விஜயகுமார் உயிரிழந்து கிடந்தார். அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயகுமார் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் கடந்த 2 தினங்களாகவே விஜயகுமார் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. 

நடந்தது என்ன?

நேற்று இரவு துணை காவல் ஆணையர் சந்தீஷ் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று வந்த விஜயகுமார், இன்று காலை 6.50 மணியளவில் வழக்கம்போல நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். பின்னர் அவருடைய பாதுகாவலர் ரவி என்பவரிடம் கைத்துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தனது அறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக  விஜயகுமாரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற உள்ளது. 

பணி வரலாறு:

விஜயகுமார் கடந்த 2009 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை சரக டி.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Lok sabha election ADMK | அதிமுகவை காலி செய்த EX அதிமுகவினர்! குழப்பத்தில் சீனியர்கள்Mayawati INDIA Bloc | மோடியை காப்பாற்றிய மாயாவதி! அந்த 16 தொகுதி இல்லன்னா... I.N.D.I.A ஆட்சிதான்Rahul gandhi :  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்? I.N.D.I.A போடும் ப்ளான்! கூட்டத்தில் பேசியது என்ன?Cuddalore Drunkard : அடடா மழைடா..அடைமழைடா! கொட்டும் மழையில் குளியல்மதுபிரியர்கள் ATROCITY

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
Embed widget