மேலும் அறிய

அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி

தீப ஒளி போன்ற விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் கூடுதலான இன்னுமொரு கவுன்ட்டரை திறக்க டாஸ்மாக் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது எனவும் 3500 அரசு மதுக்கடைகளில்  கூடுதல் விற்பனைக் கவுண்டர் திறந்து மது வணிகத்தை அதிகரிப்பது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் ஒற்றை மந்திரமா என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

 

 

3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் விற்பனை கவுன்ட்டர் திறப்பு 

தமிழ்நாட்டில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுன்ட்டரை  திறக்க டாஸ்மாக் நிர்வாகம்  முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன்  டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது.

சீரழிவுக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான்

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4775 மதுக்கடைகள்  செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3500-க்கும்  கூடுதலான கடைகளில், அதாவது கிட்டத்தட்ட 75% கடைகளில் தினமும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது என்பதே தமிழகத்தின் சீரழிவுக்கு எடுத்துக்காட்டு தான். இவற்றில் பல கடைகளில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று விற்பனைக் கவுண்டர்கள் இருந்தாலும் கூட மாலை நேரங்களிலும் தீப ஒளி போன்ற விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் கூடுதலான இன்னுமொரு கவுண்டரை திறக்க டாஸ்மாக் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது

மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகள் உள்ளன. வெளிச்சந்தையில்  உணவுப் பொருட்களை வாங்க ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்களின் நிலைமை குறித்து எந்த கவலையும் கொள்ளாத தமிழக அரசு, மதுக்கடைகளில் ஒரு சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக் கூடாது என்று நினைத்து  கூடுதல் கவுண்டர்களை திறக்கிறது என்றால் அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. வருவாய் கொடுத்து வாழ வைக்கும் மது வாடிக்கையாளர்கள் நலனை அரசு எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

விற்பனைக் கவுன்ட்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்

மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. ஏற்கனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!
Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!
Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
SK about Ajith:
SK about Ajith: "வெல்கம் டூ பிக் லீக்" சிவகார்த்திகேயனை வரவேற்ற அஜித் - காரணம் என்ன?
27 மாநிலங்களில் மும்மொழித் திட்டமா? கற்பனை உலகில் இருக்கும் ஆளுநர்: ப.சிதம்பரம் விமர்சனம்!
27 மாநிலங்களில் மும்மொழித் திட்டமா? கற்பனை உலகில் இருக்கும் ஆளுநர்: ப.சிதம்பரம் விமர்சனம்!
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
Disney+ Hotstar JIO: ரசிகர்கள் ஹாப்பி..! ஜியோ செயலிக்கு டாடா, ஐபிஎல் இனி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மட்டுமே - அம்பானி திட்டம்
Disney+ Hotstar JIO: ரசிகர்கள் ஹாப்பி..! ஜியோ செயலிக்கு டாடா, ஐபிஎல் இனி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மட்டுமே - அம்பானி திட்டம்
Embed widget