மேலும் அறிய

மருத்துவமனையில் திடீர் திருமணம்: தாய் ஆசையை நிறைவேற்றிய மகன் - விழுப்புரத்தில் நெகிழ்ச்சி!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட மகன், தாயின் ஆசையை நிறைவேற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா பெருந்தோற்று வந்த காலத்தில் இருந்து வித்தியாச வித்தியாசமான திருமணங்களை நம் முன் நிகழ செய்திருக்கிறது இந்த சூழ்நிலை. வீட்டிலேயே நடக்கும் திருமணங்களும், செலவு குறைவான திருமணங்களும், அதிக பேரை அழைக்காத திருமணங்களும், முடிந்த பிறகு லாக்டவுன் நேரத்தில் செய்ததால் அழைக்க முடியவில்லை என்று காரணம் சொல்லிக்கொள்வதும், நம் அன்றாட வாழ்வின் நியூ நார்மல் வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஆனால் அதிலும் விசித்திரமாக மருத்துவமனையிலேயே கொரோனா நோயாளி பிபிஇ கிட் அணிந்து திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் எல்லாம் அரங்கேறி இருக்கின்றன. ஆனால் விழுப்புரத்தில் தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மருத்துவமனையிலேயே மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தேறி இருக்கிறது.

மருத்துவமனையில் திடீர் திருமணம்: தாய் ஆசையை நிறைவேற்றிய மகன் - விழுப்புரத்தில் நெகிழ்ச்சி!

விழுப்புரம், திருக்காமு நகரைச் சேர்ந்த 40 வயதாகும் தயாளன் என்பவர் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதிவறை எழுத்தராக பணியில் உள்ளார். இவருக்கு 40 வயதாகியும்  திருமணம் ஆகவில்லை. இவரது  67 வயதான தாய் முத்தாளம்மாள். இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொற்று பாதித்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மேலும் மேலும் மோசமாக மாறிவரும் நிலையில் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முத்தாலம்மாளுக்கு தன் மகன் தயாளனுக்கு இத்தனை வயதாகியும் திருமணமாகாத ஒரே வருத்தம் உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. அதனை அவர் மகனிடம் கூறி திருமணம் செய்து பார்க்க முடியவில்லை என கண் கலங்கி இருக்கிறார். அதனை கேட்ட மகன் தயாளன், உடனடியாக, மருத்துவமனையில் தாயை பார்க்க வந்திருந்த 30 வயதாகும் மாமன் மகள் காயத்ரி என்பவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற யோசனை தோன்றியிருக்கிறது. உடனே பெண்ணிடமும் உறவினர்களிடமும் அது குறித்து பேசியிருக்கிறார் தயாளன். அனைவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் திடீர் திருமணம்: தாய் ஆசையை நிறைவேற்றிய மகன் - விழுப்புரத்தில் நெகிழ்ச்சி!

சம்மதம் தெரிவித்ததை அடுத்து உடனடியாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்ய சொல்லி இருக்கிறார். இதையடுத்து, மருத்துவமனை நுழைவு வாயிலிலேயே ஒரு அம்மன் கோவில் இருந்துள்ளது. அதுவே அருகிலிருப்பதாலும் அம்மாவை அதிக தூரம் கூட்டிச் செல்ல முடியாததாலும் அங்கேயே திருமண விழாவை வைக்க முடிவு செய்தார். இந்நிலையில் நேற்றைய நாளில் பகல் 3:45 மணிக்கு அந்த அம்மன் கோயிலிலேயே மாமன் மகள் காயத்ரிக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். பின், தாயிடம் ஆசி வாங்க மருத்துவமனைக்குள் மணமக்கள் சென்றனர். கொரோனா வார்டினுள் டாக்டர்கள், அனுமதிக்காததால், தாயிடம் தகவலை தெரிவிக்குமாறு கூறிவிட்டு மொபைலில் விடியோ கால் செய்து திருமண கோலத்தை காண்பித்து ஆசி பெற்றுள்ளனர். பின்னர் திருமணம் செய்துகொண்ட புது மண தம்பதியினர் வீட்டிற்கு சென்றனர். மருத்துவமனையில் நடந்த திடீர் திருமணத்தாலும் கூட்டம் கூடியதாலும் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget