மேலும் அறிய

TN Fishermen Arrest: மீண்டுமா..! நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

TN Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

TN Fishermen Arrest: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 4 பேரை  இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது:

ராமநாதபுரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 4 மீனவர்களை கடற்படை கைது செய்துள்ளது. ஒரு படகுடன்  4 மீனவர்களையும் சிறைபிடித்து  இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து அண்மையில் தான் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல துவங்கினர். இந்நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடங்கி இருப்பது, மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: Breaking News LIVE: விவசாயிகளுக்கு ரூ.2000 நிதி இன்று விடுவிப்பு - வாரணாசியில் வழங்குகிறார் பிரதமர்

தொடரும் மீனவர் கைது நடவடிக்கை:

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, பன்னெடுங்காலமாகவே தொடர்ந்து வருகிறது. அந்த வகைய்ல் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தும் நூறுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  • கடந்த மார்ச் 20ம் தேதி நெடுந்தீவு அருகே 25 மீனவர்களையும், மன்னார் அருகே 7 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
  • கடந்த மார்ச் 13ம் தேதி காரைக்காலைச் சேர்ந்த 15 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்
  • மார்ச் மாதம் 10ம் தேதி 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • பிப்ரவரி மாதம் 21ம் தேதி இலங்கைக்கு பீடி இலை கடத்தியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த  ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
  • பிப்ரவரி 4ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை கைது செய்து 2 விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணக்குப் பிறகு 20 பேர் விடுவிக்கப்பட்டு 3 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.
  • கடந்த ஜனவரி 6ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது
  • புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த ஜனவரி 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. 
  • கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
  • 2023 ஆம் ஆண்டில், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் விடுவிக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கோரிக்கையை வைப்பதோடு, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Kalki 2898 AD: கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
Embed widget