மேலும் அறிய

10 வயது சிறுவனை ஓரினச்சேர்கைக்கு உட்படுத்தியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு மதுரை மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது

மதுரை பழைய விளாங்குடியைச்சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது நண்பர் வண்டியூர் பகுதியில் கடை நடத்தி வந்தார். அந்த கடைக்கு முத்துக்குமார் அடிக்கடி சென்று வந்தார். அந்த சமயத்தில் அருகில் இருந்த பள்ளிக்கூடத்தில் படித்த 10 வயது மாணவனிடம் ஆசை வார்த்தை கூறி, விளாங்குடியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன், முத்துக்குமாரின் பிடியில் இருந்து தப்பி வீட்டில் இருந்து வெளியேறினார். அந்த சிறுவன், கூச்சலிட்டபடி ஓடிவந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு, செல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.
 
இந்த வழக்கு மதுரை மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார். முடிவில், முத்துக்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பல்வேறு தண்டனைச் சட்டப்பிரிவுகளின்கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.
 
 

மனைவியை ஆணவக்கொலை செய்ய முயற்சி - தன்னிடம் ஒப்படைக்க கோரி கணவன் வழக்கு
 
திருச்சி, வரகநேரியைச் சேர்ந்த ஜெகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "என்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண்ணை காதலித்தேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அவரது பெற்றோர் எங்களது காதலை ஏற்கவில்லை. இதனால் கடந்த மார்ச் 12ஆம் தேதி இருவரும் திருச்சி தாலடியார் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். என் மனைவி கர்ப்பமானார். அவர்களது பெற்றோர் தற்கொலை  செய்வதாக கூறியதால் அவர்களது வீட்டுக்கு சென்றார். கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி செல்போனில் பேசிய என் மனைவி, தன்னை ஆணவக்கொலை செய்து விடுவதாக பெற்றோர் மிரட்டுவதாக கூறினார்.  பின்னர்  தொடர்பு கொள்ள முடியவில்லை.
 

10 வயது சிறுவனை ஓரினச்சேர்கைக்கு உட்படுத்தியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
 
என் மனைவியின் கருவை கலைத்துள்ளனர். அவர்களது வீட்டிற்கு நேரில் சென்றபோது, அங்கு இல்லையென கூறினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. என் மனைவியை சட்டவிரோதமாக தடுத்து வைத்து ஆணவக்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். மனைவியை கண்டுபிடிக்க அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனைவிவை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், " போலீசில் அளித்த புகாரில் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் திருமணம் செய்து கொண்டதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார். எனவே, நீதிமன்றத்திற்கு தவறான தகவலை தெரிவித்ததாக அவர் மீது அறந்தாங்கி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
TTV vs Vijay : திமுக ஆட்சியில் ரூ.758 கோடி... தவெக ஆட்சியில் ரூ.1038 கோடி ஆனது எப்படி? - விஜய்யிடம் கணக்கு கேட்கும் டிடிவி
திமுக ஆட்சியில் ரூ.758 கோடி... தவெக ஆட்சியில் ரூ.1038 கோடி ஆனது எப்படி? - விஜய்யிடம் கணக்கு கேட்கும் டிடிவி
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget