மேலும் அறிய

PMK MLA Protest: பாலத்தின் குறுக்கே வர பாதை வேண்டும்... நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமக எம்எல்ஏ

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் குறுக்கே மக்கள் எளிதாக சென்று வர பாதை அமைத்து தரக்கோரி பாமக எம்எல்ஏ அருள் அரசு அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் பகுதியில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியில் உள்ளூர் மக்கள் பயன்பாட்டிற்காக பாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர். மற்றொரு பகுதியில் நெடுஞ்சாலைக்கு இரு புறமும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. அந்த பகுதியில் உள்ள அண்ணாநகர், தில்லை நகர், அமராவதி நகர், சின்ன மோட்டூர், ஊத்து கிணறு, கிழாக்காடு உள்ளிட்ட பகுதி மக்கள் ஒருபுறம் இருந்து மற்றொரு புரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக மேம்பாலத்தின் மற்றொரு புறமும் பாதை அமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

PMK MLA Protest: பாலத்தின் குறுக்கே வர பாதை வேண்டும்... நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமக எம்எல்ஏ

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் நான்கு முறை அதிகாரிகளை சந்தித்து மக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலத்தின் குறுக்கே பாதை அமைத்து தர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் மேம்பாலத்தின் குறுக்கே பாதை அமைக்காமல் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அருளுடன் குரங்குச்சாவடி பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அலுவலகத்தை பூட்ட அருள் கையில் பூட்டு சங்கிலி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கை ஏற்காத அரசு அலுவலகம், அதிகாரிகள் எதற்கு என சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கேள்வி எழுப்பினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தின் குறுக்கே இரண்டாவது பாதை அமைப்பது தொடர்பாக திட்டம் வகுத்து வரைபடத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர். மாமாங்கம் பகுதி மக்களின் கோரிக்கையை துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இயன்றவரை பாதை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மீண்டும் மனு அளித்த சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தான் கொண்டு வந்த பூட்டையும் சங்கிலியையும் அவரிடமே கொடுத்து விட்டு சென்றார்.

தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் குறுக்கே இரண்டாவது பாதை அமைத்து தரவில்லை என்றால் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - 22 மணி நேர கவுண்-டவுன்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - 22 மணி நேர கவுண்-டவுன்
''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - 22 மணி நேர கவுண்-டவுன்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - 22 மணி நேர கவுண்-டவுன்
''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
Embed widget