மேலும் அறிய

PMK MLA Protest: பாலத்தின் குறுக்கே வர பாதை வேண்டும்... நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமக எம்எல்ஏ

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் குறுக்கே மக்கள் எளிதாக சென்று வர பாதை அமைத்து தரக்கோரி பாமக எம்எல்ஏ அருள் அரசு அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் பகுதியில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியில் உள்ளூர் மக்கள் பயன்பாட்டிற்காக பாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர். மற்றொரு பகுதியில் நெடுஞ்சாலைக்கு இரு புறமும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. அந்த பகுதியில் உள்ள அண்ணாநகர், தில்லை நகர், அமராவதி நகர், சின்ன மோட்டூர், ஊத்து கிணறு, கிழாக்காடு உள்ளிட்ட பகுதி மக்கள் ஒருபுறம் இருந்து மற்றொரு புரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக மேம்பாலத்தின் மற்றொரு புறமும் பாதை அமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

PMK MLA Protest: பாலத்தின் குறுக்கே வர பாதை வேண்டும்... நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமக எம்எல்ஏ

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் நான்கு முறை அதிகாரிகளை சந்தித்து மக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலத்தின் குறுக்கே பாதை அமைத்து தர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் மேம்பாலத்தின் குறுக்கே பாதை அமைக்காமல் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அருளுடன் குரங்குச்சாவடி பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அலுவலகத்தை பூட்ட அருள் கையில் பூட்டு சங்கிலி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கை ஏற்காத அரசு அலுவலகம், அதிகாரிகள் எதற்கு என சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கேள்வி எழுப்பினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தின் குறுக்கே இரண்டாவது பாதை அமைப்பது தொடர்பாக திட்டம் வகுத்து வரைபடத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர். மாமாங்கம் பகுதி மக்களின் கோரிக்கையை துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இயன்றவரை பாதை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மீண்டும் மனு அளித்த சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தான் கொண்டு வந்த பூட்டையும் சங்கிலியையும் அவரிடமே கொடுத்து விட்டு சென்றார்.

தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் குறுக்கே இரண்டாவது பாதை அமைத்து தரவில்லை என்றால் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget