மேலும் அறிய

Seeman: மத்தியில் ஆளும் மோடி ஆட்சியை அடக்க வேண்டும் என்றால் புரட்சி வெடிக்க வேண்டும் - சீமான் அதிரடி

இந்த நாடு அடிமை பட்டு கிடக்கும்போது, நாட்டின் விடுதலைக்காக ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி போராடியதா? என சீமான் கேள்வி.

சேலம் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, யாரிடமிருந்து யாரை பாதுகாக்க இந்திய கடற்படை உள்ளது. என் மீனவ மக்களை பாதுகாக்கவே நெய்தல் படை அமைப்பேன் என்றேன். ஊர் காவல்படை, காவல்படை போல மீனவர்களை பாதுகாக்க நெய்தல் படை அவசியம். நான் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நெய்தல் படை அமைப்பேன். கேரளாவில் நீலப்படை அமைத்து அதில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார். அதேபோல் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நெய்தல் மீட்சி இயக்கம் தொடங்கப்படும் என்கிறார்.

Seeman: மத்தியில் ஆளும் மோடி ஆட்சியை அடக்க வேண்டும் என்றால் புரட்சி வெடிக்க வேண்டும் - சீமான் அதிரடி

அதிகாரத்தில் இருப்பவர்கள் சொன்னால் குற்றமல்ல; நான் சொன்னால் குற்றமா? என கேள்வி எழுப்பினார். நா.த நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை என்பது வெறும் அச்சுறுத்தவே. இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். என் வீட்டில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை நடத்த முடியவில்லை. இதில் இருந்தே எனக்கு பணம் வரவில்லை என்பது தெரிகிறது. ஓமலூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களை பார்த்து துப்பாக்கி தயார் செய்தவர்கள் என் கட்சிகளை சேர்ந்தவர்களே இல்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எங்கள் மீது விசாரணை என்றால் தேர்தல் நேரத்தில் எங்களை சமாளிக்க முடியாமல்தான். சண்டிகரில் நடந்த மேயர் தேர்தலில் பாஜக நடந்து கொண்ட விதத்தை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது. இவர்களை மக்கள் எப்படி நம்புவார்கள். பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளும் விதம், ஆட்சியை கலைக்கும் விதம் போன்றவற்றை மக்களே அறிவார்கள். சீலன் என்பவரோடு எங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறுகிறார்களே, ஜெர்மனில் இருக்கும் சீலனை ஏன் இன்னும் விசாரிக்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார். நான் உயிரோடு இருக்கும் வரை என் கட்சியும், லட்சியமும் இருக்கும். கூட்டணி குறித்த கேள்விக்கு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்க அதிபர் பைடனுடன் கூட்டணி என கிண்டல். விஜய் உடனான கூட்டணி குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Seeman: மத்தியில் ஆளும் மோடி ஆட்சியை அடக்க வேண்டும் என்றால் புரட்சி வெடிக்க வேண்டும் - சீமான் அதிரடி

மேலும், ஆட்சியில் இருப்பவர்களின் தனியார் மயமாக்கல், இந்த மண்ணுக்கு என்ன செய்தார்கள், மக்களின் நலன், அவர்களின் எதிர்கால வாழ்வு உள்ளிட்டவற்றை சீரழித்தது குறித்து தேர்தல் பரப்புரையில் பேசுவேன். 10 ஆண்டுகால ஆட்சியில் இந்த நாடு வளர்ச்சி அடைந்ததா என கேள்வி எழுப்பிய அவர், இந்த நாடு அடிமை பட்டு கிடக்கும் போது, நாட்டின் விடுதலைக்காக ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி போராடியதா? என்றார். 2040ல் இந்தியாவை வல்லரசாக்க மாட்டார்கள், அதானி அம்பானியின் வீடாக அல்ல நாடாக இருக்கும். 2040ல் இந்திய நாடே இருக்காது. ரஃபேல் விமானம் வாங்கியதில் 200 ஊழல். ஆனால் அதற்கு இதுவரை பதில் இல்லை. இதேபோல் போர் கப்பலை ரஷ்யாவிலும், போர் விமானத்தை அமெரிக்காவிலும், பீரங்கியை இஸ்ரேலிலும் வாங்கி கொண்டு எந்த நாட்டுடன் சண்டை போட்டு மக்களை காப்பாற்றுவார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். ஈடி, ஈவிஎல், ஈவிஎம் மற்றும் தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணைய அதிகாரிகளை நீங்களே நியமிக்கலாம் என்கிற அதிகாரங்களை எல்லாம் வைத்து கொண்டுள்ளதோடு ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொரு கையில் வாக்கு பெட்டியும் வைத்து கொண்டு இருக்கும்போது எங்களால் என்ன செய்ய முடியும். சந்திர மண்டலத்திற்கு சந்திராயானை அனுப்பி நாம் புமியில் இருந்து அதை இயக்கியதை போல ஈவிஎம்-ஐ ஒரு அறையில் இருந்து இயக்க முடியாதா என கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வில் மூக்குத்தியில் பிட்டு கொண்டு வந்து விடுவார்கள் என கூறும் மத்திய அரசால் இதை செய்ய முடியாதா நேர்மை என்றால் வாக்குச்சீட்டு முறைக்கு வர வேண்டும். மக்களை சந்திக்காதவர்கள்தான் இந்த ஆட்சியில் அமைச்சர்களாக உள்ளனர். எனவே ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை நேரடியாக சந்தித்தவர்களாக இருக்க வேண்டும். மத்தியில் ஆளும் மோடி ஆட்சியை அடக்க வேண்டும் என்றால் புரட்சி வெடிக்க வேண்டும் இதற்கு இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
ரூபாய் 4 லட்சம் வரை ஆஃபர்.. ஆடித்தள்ளுபடி விலையில் ஹுண்டாய் கார்கள் - எந்த காருக்கு எவ்ளோ கம்மி?
ரூபாய் 4 லட்சம் வரை ஆஃபர்.. ஆடித்தள்ளுபடி விலையில் ஹுண்டாய் கார்கள் - எந்த காருக்கு எவ்ளோ கம்மி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
ரூபாய் 4 லட்சம் வரை ஆஃபர்.. ஆடித்தள்ளுபடி விலையில் ஹுண்டாய் கார்கள் - எந்த காருக்கு எவ்ளோ கம்மி?
ரூபாய் 4 லட்சம் வரை ஆஃபர்.. ஆடித்தள்ளுபடி விலையில் ஹுண்டாய் கார்கள் - எந்த காருக்கு எவ்ளோ கம்மி?
Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை  - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி
Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி
Top 10 News Headlines: காதலால் ரூ.8 கோடி இழந்த 80 வயது முதியவர், நிலவில் அணுமின் நிலையம்  - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: காதலால் ரூ.8 கோடி இழந்த 80 வயது முதியவர், நிலவில் அணுமின் நிலையம் - 11 மணி செய்திகள்
Breast Feed: பெண்களே.. தாய்ப்பால் தடையின்றி சுரக்க வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்க..!
Breast Feed: பெண்களே.. தாய்ப்பால் தடையின்றி சுரக்க வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்க..!
Nissan SUV:  டஸ்டரை வைச்சு க்ரேட்டாவை துடைக்க நிசானின் பிளான் - சோதனையில் சிக்கிய புதிய எஸ்யுவி
Nissan SUV: டஸ்டரை வைச்சு க்ரேட்டாவை துடைக்க நிசானின் பிளான் - சோதனையில் சிக்கிய புதிய எஸ்யுவி
Embed widget