மேலும் அறிய

சேலம் : ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவால் பரபரப்பு.. போக்குவரத்துக்கு தற்காலிக தடை..

சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு, 60 அடி பாலம், 80 அடி பாலம் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தளமான ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு, 60 அடி பாலம், 80 அடி பாலம் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சாலை மற்றும் தடுப்பு சுவர் மீது ராட்சத பாறைகள் மற்றும் கற்கள் சரிந்து கீழ் சாலையில் விழுந்த காரணத்தால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. மண்சரிவு குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

சேலம் : ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவால் பரபரப்பு.. போக்குவரத்துக்கு தற்காலிக தடை..

நேற்று மாலையும் தொடர்ந்து மிதமான மழை பெய்த போதிலும் இரவு முழுவதும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சாலைகள் விழுந்திருந்த மரங்களை பொதுப்பணி துறையினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அகற்றினார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் இவற்றிலிருந்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் சரிவு ஏற்படலாம் என்பதற்காக அடிவாரத்தில் உள்ள காவல் துறையின் சோதனை சாவடியிலேயே வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. 

கடந்த ஆண்டு இதேபோன்று ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகள் இதுவரை சீர்படுத்தாமல் சேலம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் கொண்டு வந்தது. இது குறித்து கடந்த வாரம் ஏபிபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பதிவிற்கான மழையால் கடந்தாண்டு மண் சரிவு ஏற்பட்ட அதே இடங்களில் மீண்டும் பத்திருக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 

சேலம் : ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவால் பரபரப்பு.. போக்குவரத்துக்கு தற்காலிக தடை..

நேற்று இரவு ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் அடிவாரத்தில் தடுத்த நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். சாலையை சீர்படுத்த ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் குப்பனூர் - ஏற்காடு சாலையை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மழை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏற்காடு மலை பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் 146.2 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 58 மி.மீ மழை பெய்தது. அதிகபட்சமாக வீரகனூரில் 20.00 மி.மீ மழை பதிவானது. கங்கவல்லியில் 20 மி.மீ மழையும், சேலத்தில் 11.7 மி.மீ, காரிய கோவில் 17 மி.மீ, காடையாம்பட்டி 5 மி.மீ, சங்ககிரி  2.1 மி.மீ, ஓமலூர் 11 மி.மீ, எடப்பாடி 1.4 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget