மேலும் அறிய

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து இடிந்த வீடுகள் - உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

மூன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜா ஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் பத்திரமாக மீட்பு.

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பகுதியில் உள்ள பாண்டுரங்கன் கோவில் தெரு  பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளன. இந்த நிலையில் கோபி என்பவரது வீட்டில் அவரது தாயார் ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த வீடும், மேல் தளத்தில் இருந்த இரண்டு வீடும் என நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் கட்டடத்தின் பாகங்கள் வெடித்து சிதரியதில் பால் வியாபாரி ஒருவரும், எதிர் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி என்பவரின் மீது விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து இடிந்த வீடுகள் - உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர்,  காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுதர்சன், கோபால், சுப்பிரமணி, தனலட்சுமி, நாக சுதா, இந்திராணி, மோகன்ராஜ், கோபி, லோகேஷ், ராஜலட்சுமி, வெங்கடராஜன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 80 வயதான ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  மூன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜா ஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன், அவரது மனைவி தேவி, 90 வயது மூதாட்டி மற்றும் பூஜாஸ்ரீயின் அண்ணன் கார்த்திக் ராம் ஆகிய நான்கு பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து இடிந்த வீடுகள் - உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கோபி என்பவர் இனிப்பு பலகாரம் செய்ய வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்தியபோது இந்த விபத்து நேரிட்டு இருப்பதாகவும் இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 13 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதுபோன்று இனிப்பு தயாரிக்க வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்துவோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்த அமைச்சர் கே என் நேரு இதனை மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக கண்காணிக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சேலம் சிலிண்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாளை முதலமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் கே.என்.நேரு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து இடிந்த வீடுகள் - உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை நேரில் கண்காணித்து வருகின்றனர். விபத்து குறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர் உயிரிழந்ததால் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget