மேலும் அறிய

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து இடிந்த வீடுகள் - உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

மூன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜா ஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் பத்திரமாக மீட்பு.

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பகுதியில் உள்ள பாண்டுரங்கன் கோவில் தெரு  பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளன. இந்த நிலையில் கோபி என்பவரது வீட்டில் அவரது தாயார் ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த வீடும், மேல் தளத்தில் இருந்த இரண்டு வீடும் என நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் கட்டடத்தின் பாகங்கள் வெடித்து சிதரியதில் பால் வியாபாரி ஒருவரும், எதிர் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி என்பவரின் மீது விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து இடிந்த வீடுகள் - உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர்,  காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுதர்சன், கோபால், சுப்பிரமணி, தனலட்சுமி, நாக சுதா, இந்திராணி, மோகன்ராஜ், கோபி, லோகேஷ், ராஜலட்சுமி, வெங்கடராஜன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 80 வயதான ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  மூன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜா ஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன், அவரது மனைவி தேவி, 90 வயது மூதாட்டி மற்றும் பூஜாஸ்ரீயின் அண்ணன் கார்த்திக் ராம் ஆகிய நான்கு பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து இடிந்த வீடுகள் - உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கோபி என்பவர் இனிப்பு பலகாரம் செய்ய வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்தியபோது இந்த விபத்து நேரிட்டு இருப்பதாகவும் இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 13 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதுபோன்று இனிப்பு தயாரிக்க வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்துவோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்த அமைச்சர் கே என் நேரு இதனை மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக கண்காணிக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சேலம் சிலிண்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாளை முதலமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் கே.என்.நேரு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து இடிந்த வீடுகள் - உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை நேரில் கண்காணித்து வருகின்றனர். விபத்து குறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர் உயிரிழந்ததால் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
CBE Ring Road: அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
CBE Ring Road: அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
மருத்துவ கனவை பறித்த நீட்; ஆனா என்ன? 20 வயதில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை- ரூ. 72 லட்சம் ஊதியம்!
மருத்துவ கனவை பறித்த நீட்; ஆனா என்ன? 20 வயதில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை- ரூ. 72 லட்சம் ஊதியம்!
Gaza Tragedy: சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
Embed widget