மேலும் அறிய

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதை தவிருங்கள் - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை வெப்பத்தில் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது. சூரியன் உதயமானது காலை 5:30 மணிக்கு தோன்றுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை வெயிலில் தாக்கும் மிகவும் அதிகரித்து உள்ளது. இது மட்டும் இன்றி காற்றில் வெப்பம் அதிக அளவில் உள்ளது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வைக்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளி செயல்படுகிறது. காலை பள்ளிக்கு வரும் மாணவர்கள் மதியமும், மதியம் பள்ளிக்கு வரும் மாணவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வெயிலில் அளவு 105.08 டிகிரியாக பதிவாகி இருந்தது. இன்று 106.1 டிகிரியாக பதிவாகியுள்ளது.

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதை தவிருங்கள் - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

நாளுக்குநாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் அவசிய காரணங்கள் தவிர நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதைத் தவிர்த்தல் வேண்டும். அவசிய காரணங்களால் வெளியே செல்லும் பயணத்தின்போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, கற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும், திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். கடினமாக வேலை செய்யும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்குச் செல்லலாம். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் 108 ஆம்புலன்சை மருத்துவ உதவிக்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதை தவிருங்கள் - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்கவும். அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். குறிப்பாக, கோடைகாலத்தில் குளிர்ந்த நீரால் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும். சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொள்ளலாம். வாகனங்களுக்குள் குழந்தைகளை விட்டுச் செல்லுதலைத் தவிர்க்க வேண்டும். மேலும், வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. குறிப்பாக, மது அருந்துதல் மற்றும் கேஸ் நிரப்பப்பட்ட குளிர் பானங்களை அருந்துதல், அளவுக்கு அதிகமான தேனீர் மற்றும் காபி அருந்துதல், அதிக அளவில் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அருந்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Embed widget