மேலும் அறிய

அறுவடைக்கு தயாரான நிலையில் செடிகளிலேயே கருகும் செண்டு மல்லிகள் - தவிக்கும் தருமபுரி விவசாயிகள்

’’பூக்கள் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், திடீரென செண்டுமல்லி செடிகள் காய்ந்து கருகி அழிந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் தற்போது புதுவிதமான நோயால் செடிகள் அழிந்து வருகிறது’’

தருமபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர், தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் மலர் சாகுபடியில் பெரும்பாலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மல்லி, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைகின்ற பூக்கள் அனைத்தும் ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

அறுவடைக்கு தயாரான நிலையில் செடிகளிலேயே கருகும் செண்டு மல்லிகள் - தவிக்கும் தருமபுரி விவசாயிகள்
 
இதில் பெரும்பாலான விவசாயிகள் சாமந்தி மற்றும் செண்டுமல்லி பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்பொழுது தசரா, ஆயுத பூஜை பண்டிகை வரும் நிலையில் சாமந்தி செண்டு மல்லி பூ விளைச்சல் அதிகமாக உள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் செண்டு மல்லி பூக்கள் விளைச்சல் அமோகமாக இருந்து வருகிறது. மேலும் தற்போது பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதாலும், தசரா ஆயுத பூஜை போன்ற பண்டிகைக் காலங்கள் என்பதால் நல்ல விலையும் கிடைத்து வருகிறது. ஆனால் அரூர் அடுத்த செல்லம்பட்டி, கீழானூர், முத்தானூர், ஈட்டியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூக்கள் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், திடீரென செண்டுமல்லி செடிகள் காய்ந்து கருகி அழிந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் தற்போது புதுவிதமான நோயால் செடிகள் அழிந்து வருகிறது.

அறுவடைக்கு தயாரான நிலையில் செடிகளிலேயே கருகும் செண்டு மல்லிகள் - தவிக்கும் தருமபுரி விவசாயிகள்
 
இந்த நோய்க்கு என்ன வகையான மருந்துகளை தெளிப்பது என்பது குறித்து கடைகளில் தெரிவித்தாலும் கூட, மருந்துக் கடைகள் தெரியவில்லை என பதில் அளிக்கின்றனர். சாதாரணமாக செண்டு மல்லி பூக்களில் ஒரு சில நோய்கள் தாக்கும். அப்பொழுது மருந்துகளை இரண்டு முறை, மூன்று முறை தெளித்தால் செடி தெளிவடைந்து, நல்ல மகசூலைக் கொடுக்கும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நோய் புதுவிதமாக இருந்து வருகிறது. மேலும் செண்டுமல்லி விதைகள் தட்டுப்பாட்டால் ஓசூர் ராயக்கோட்டை பகுதிகளிலிருந்து, அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கி வந்து சாகுபடி செய்து வருகின்றோம்.
 

அறுவடைக்கு தயாரான நிலையில் செடிகளிலேயே கருகும் செண்டு மல்லிகள் - தவிக்கும் தருமபுரி விவசாயிகள்
 
ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த நோயால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, செண்டுமல்லி பூச்செடி அழுகுவதற்கான காரணத்தை அறிந்து, அதனை காப்பாற்றுவதற்கு தேவையான வழிமுறைகளை வழங்க வேண்டும். அதேபோல் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை வருவாய் துறையினர் முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு செண்டு மல்லி பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget