மேலும் அறிய

தருமபுரி: பேருந்து வசதி வேண்டும்; நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள்  சாலை மறியல்

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் கல்லூரி மாணவர்கள்  பேருந்து வசதி கேட்டு தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல்.

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் கல்லூரி மாணவர்கள் பேருந்து வசதி கேட்டு தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
தருமபுரி பைசுஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் முதுகலை பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றனர். புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் தற்காலிகமாக தருமபுரி அரசு கலை கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் இந்த புதிய கட்டிடத்தில் மாணவர்களுக்கு தேவையான விடுதி வசதிக்கான கட்டிடங்கள் இன்னும் கட்டப்படவில்லை. இதனால்  தருமபுரி அரசு கலை கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், தினமும் அரசு கலைக் கல்லூரியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வந்து, பேருந்து நிலையத்திலிருந்து பைசுஹள்ளிக்கு தினமும் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
 

தருமபுரி: பேருந்து வசதி வேண்டும்; நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள்  சாலை மறியல்
 
மேலும் பைசுஹள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளதால், இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகளும் ஒரே நேரத்தில், ஒரே பேருந்தில் பயணம் செய்கின்ற சூழல் இருந்து வருகிறது. இதனால் குறித்த நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால், கூட்ட நெரிச்சலில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி. மேலும் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் கல்லூரி நேரத்திற்கு தகுந்தார் போல் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பலமுறை அரசு அதிகாரிகளிடத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 

தருமபுரி: பேருந்து வசதி வேண்டும்; நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள்  சாலை மறியல்
 
 
இதனால் ஆத்திரமடைந்த பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் திடீரென தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தருமபுரி மதிக்கோன்பாளையம் காவல் துறையினர் மற்றும் காரிமங்கலம் வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது இரண்டு கல்லூரிகள் ஒரே இடத்தில் இருப்பதால், குறித்த நேரத்தில் வருவதற்கான பேருந்து வசதிகள் குறைவாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூடுதலாக கல்லூரி நேரத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவ மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
Embed widget