மேலும் அறிய

தருமபுரி: பேருந்து வசதி வேண்டும்; நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள்  சாலை மறியல்

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் கல்லூரி மாணவர்கள்  பேருந்து வசதி கேட்டு தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல்.

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் கல்லூரி மாணவர்கள் பேருந்து வசதி கேட்டு தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
தருமபுரி பைசுஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் முதுகலை பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றனர். புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் தற்காலிகமாக தருமபுரி அரசு கலை கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் இந்த புதிய கட்டிடத்தில் மாணவர்களுக்கு தேவையான விடுதி வசதிக்கான கட்டிடங்கள் இன்னும் கட்டப்படவில்லை. இதனால்  தருமபுரி அரசு கலை கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், தினமும் அரசு கலைக் கல்லூரியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வந்து, பேருந்து நிலையத்திலிருந்து பைசுஹள்ளிக்கு தினமும் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
 

தருமபுரி: பேருந்து வசதி வேண்டும்; நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள்  சாலை மறியல்
 
மேலும் பைசுஹள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளதால், இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகளும் ஒரே நேரத்தில், ஒரே பேருந்தில் பயணம் செய்கின்ற சூழல் இருந்து வருகிறது. இதனால் குறித்த நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால், கூட்ட நெரிச்சலில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி. மேலும் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் கல்லூரி நேரத்திற்கு தகுந்தார் போல் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பலமுறை அரசு அதிகாரிகளிடத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 

தருமபுரி: பேருந்து வசதி வேண்டும்; நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள்  சாலை மறியல்
 
 
இதனால் ஆத்திரமடைந்த பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் திடீரென தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தருமபுரி மதிக்கோன்பாளையம் காவல் துறையினர் மற்றும் காரிமங்கலம் வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது இரண்டு கல்லூரிகள் ஒரே இடத்தில் இருப்பதால், குறித்த நேரத்தில் வருவதற்கான பேருந்து வசதிகள் குறைவாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூடுதலாக கல்லூரி நேரத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவ மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget