மேலும் அறிய
Advertisement
வயலில் மின்வேலி அமைத்து வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - தருமபுரி ஆட்சியர் எச்சரிக்கை
வன விலங்குகளை துன்புறுத்துவது, வயலில் மின்வேலி அமைத்து வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை - தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி எச்சரிக்கை.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு வெளியேறும் யானைகளை வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், இந்த யானைகள் தொடர்ந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. ஓரிரு யானைகளுடன் இணைந்து விளைநிலங்களில் சேதங்களை ஏற்படுத்தி வந்த மக்னா யானை ஒன்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு முதுமலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அந்த மக்னாவுடன் தருமபுரியில் சுற்றிவந்த ஒற்றை ஆண் யானை கிராமங்கள், விளைநிலங்களில் அவ்வப்போது நுழைவதும், வனத்துக்குள் செல்வதுமாக உள்ளது. இதுதவிர, மாரண்ட அள்ளி அருகே 2 குட்டிகளுடன் 2 பெண் மற்றும் 1 ஆண் என 5 யானைகள் ஏரிகளில் முகாமிட்டு குளித்தும், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இவ்வாறு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலக்கோடு வனச்சரக பகுதியையொட்டி அச்சம் ஏற்படுத்தி வரும் யானைகள் வெளியேறாதபடி தடுக்க வேண்டும் என விவசாயிகளும், கிராம மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும், வனத்துறை சார்பில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்க தற்காலிக தீர்வு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன் தினம் இரவு 2 பெண் மற்றும் 1 ஆண் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் அப்பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வந்தன.இதனையடுத்து மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், மாரண்டஹள்ளி அருகே மின்வேளிலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள காப்பு காடுகளில் நுழைவது வன விலங்குகளை துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சாரத்துறை இணைந்து சிறப்பு ரோந்து பணி மேற்கொண்டு, சட்ட விரோத மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு சட்டவிரோத மின்வேலிகள் அமைக்கப்பட்டது தெரியவந்தால், அந்த மின்னிணைப்பு மின்சார துறையினரால் துண்டிக்கப்படும். மேலும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் சட்ட விரோத மின்வேலியில் சிக்கி வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், வனத் துறையினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வன விலங்குகளை வேட்டையாடுதல், வனத்திற்கோ, வன விலங்களுக்கோ குந்தகம் விளைவித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதிகபட்சமாக 07 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகையுள்ளது. இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாக அறிந்தால், பொதுமக்கள் இலவச தொலைப்பேசி எண் 1800 425 4586 வாயிலாக வனத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion