மேலும் அறிய

வயலில் மின்வேலி அமைத்து வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - தருமபுரி ஆட்சியர் எச்சரிக்கை

வன விலங்குகளை துன்புறுத்துவது, வயலில் மின்வேலி அமைத்து வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை - தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி எச்சரிக்கை.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு வெளியேறும் யானைகளை வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், இந்த யானைகள் தொடர்ந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. ஓரிரு யானைகளுடன் இணைந்து விளைநிலங்களில் சேதங்களை ஏற்படுத்தி வந்த மக்னா யானை ஒன்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு முதுமலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வயலில் மின்வேலி அமைத்து வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - தருமபுரி  ஆட்சியர்  எச்சரிக்கை
 
அதைத் தொடர்ந்து, அந்த மக்னாவுடன் தருமபுரியில் சுற்றிவந்த ஒற்றை ஆண் யானை கிராமங்கள், விளைநிலங்களில் அவ்வப்போது நுழைவதும், வனத்துக்குள் செல்வதுமாக உள்ளது. இதுதவிர, மாரண்ட அள்ளி அருகே 2 குட்டிகளுடன் 2 பெண் மற்றும் 1 ஆண் என 5 யானைகள் ஏரிகளில் முகாமிட்டு குளித்தும், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இவ்வாறு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலக்கோடு வனச்சரக பகுதியையொட்டி அச்சம் ஏற்படுத்தி வரும் யானைகள் வெளியேறாதபடி தடுக்க வேண்டும் என விவசாயிகளும், கிராம மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.‌ ஆனாலும், வனத்துறை சார்பில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்க தற்காலிக தீர்வு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன் தினம் இரவு 2 பெண் மற்றும் 1 ஆண் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் அப்பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வந்தன.இதனையடுத்து மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். 
 
 
இந்த நிலையில், மாரண்டஹள்ளி அருகே மின்வேளிலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தருமபுரி மாவட்டத்தில் உள்ள காப்பு காடுகளில் நுழைவது வன விலங்குகளை துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சாரத்துறை இணைந்து சிறப்பு ரோந்து பணி மேற்கொண்டு, சட்ட விரோத மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு சட்டவிரோத மின்வேலிகள் அமைக்கப்பட்டது தெரியவந்தால், அந்த மின்னிணைப்பு மின்சார துறையினரால் துண்டிக்கப்படும். மேலும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் சட்ட விரோத மின்வேலியில் சிக்கி வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், வனத் துறையினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வயலில் மின்வேலி அமைத்து வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - தருமபுரி  ஆட்சியர்  எச்சரிக்கை
 
வன விலங்குகளை வேட்டையாடுதல், வனத்திற்கோ, வன விலங்களுக்கோ குந்தகம் விளைவித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதிகபட்சமாக 07 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகையுள்ளது. இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாக அறிந்தால், பொதுமக்கள் இலவச தொலைப்பேசி எண் 1800 425 4586 வாயிலாக வனத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget