மேலும் அறிய

சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் வணிகவியல் நீதிமன்றம் திறப்பு..!

தேரின் இருசக்கரங்கள் போல வழக்கறிஞர்கள் நீதித்துறையுடன் இணைந்து செயல்பட்டால் வழக்குகளில் விரைவான தீர்வு கிடைக்கும் என்றும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சேலத்தில் பேச்சு.

சென்னைக்கு அடுத்தப்படியாக சேலத்தில் வணிகவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.3.07 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வணிகவியல் நீதிமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி வணிகவியல் நீதிமன்றத்தை திறந்து வைத்து, நீதிமன்ற செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். இதனையடுத்து சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வழக்கறிஞர்களுக்கான அறைகள் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அவர், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

 சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் வணிகவியல் நீதிமன்றம்  திறப்பு..!

இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றுதல் அவர், வணிகவியல் சார்ந்த வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வணிக மையமாக இருக்கும் சேலம் மாவட்டத்தில் 2 வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நீதித்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும், வணிகர்களுக்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் இந்த வணிகவியல் நீதிமன்றம் நன்மையை அளிக்கும். இந்த நீதிமன்றம் செயல்படுவதற்கு வழக்கறிஞர்கள் நீதித்துறையுடன் இணைந்து செயல்பட்டால், வழக்குகளில் துரிதமான தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டின் மூதலீடுகள் அவசியமாகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயக்கமின்றி வருவதற்கு வணிகம் சார்ந்த பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு அவசியமாகிறது. 

சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் வணிகவியல் நீதிமன்றம்  திறப்பு..!

வழக்குகளில் தாமதம் வளர்ச்சியை தாமதப்படுத்தும். உடனடித் தீர்வு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால் இது போன்ற வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வணிகம் சார்ந்த வழக்குகள், வணிகத்துறையினர் முதலீட்டாளர்கள் ஆகியோரது பிரச்னைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும். நாட்டின் பொருளாதாரமும் இதன்மூலம் வளர்ச்சியடையும். தாமதமின்றி தீர்வு கிடைக்கும் நீதிமன்றத்துடன் வழக்கறிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும். தேரின் இரு சக்கரங்கள் போல நீதித்துறையும், வழக்கறிஞர்களும் இணைந்து செயல்படும்போது விரைவான தீர்வு வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிடைக்கும். சேலத்தில் வழக்கறிஞர்களுக்கான 32 அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் 32 அறைகள் கட்ட கோரிக்கை வைத்தால் அரசின் பரிசீலனைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினார். 

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், சதீஸ் குமார், அப்துல் குத்தூஸ், இளந்திரையன், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் சேலம் மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் என கலந்து கொண்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget