மேலும் அறிய

Minister Senthil Balaji : ‘வெளிநாடு சென்ற முதல்வர், அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் ரெய்டு’ குறி யாருக்கு..?

’அமைச்சர் செந்தில்பாலாஜியை குறி வைத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டாலும் இது திமுகவின் மற்ற அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது’

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் குறிப்பாக அவரது தம்பி அசோக்கின் கரூர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.Minister Senthil Balaji :  ‘வெளிநாடு சென்ற முதல்வர், அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் ரெய்டு’ குறி யாருக்கு..?

காலையிலேயே கரூர் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள்

மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் உதவியுடன் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் இல்லத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், வீட்டில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு, அசோக்கிற்கு போன் செய்து வர சொல்லியுள்ளனர். மேலும், வீட்டில் உள்ள ஆவணங்கள், சொத்து தொடர்பான பத்திரங்கள் இவற்றையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்களை எடுத்து வர சொல்லியுள்ளனர்.

செந்தில்பாலாஜி தம்பி அசோக்
செந்தில்பாலாஜி தம்பி அசோக்

விரைந்து வந்த மேயர் – கரூர் மாநகராட்சி கூட்டம் ரத்து

செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை என்று தெரிந்ததும் இன்று நடைபெறாவிருந்த கரூர் மாநகராட்சி கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மேயர் கவிதா கணேசன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள அசோக் வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக திமுகவினரும் அப்பகுதியில் கூடினர்.Minister Senthil Balaji :  ‘வெளிநாடு சென்ற முதல்வர், அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் ரெய்டு’ குறி யாருக்கு..?

 அதிகாரிகள் காரை சேதப்படுத்திய தொண்டர்கள் 

வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டும் அவர்கள் வந்த காரை சேதப்படுத்தியும் திமுக தொண்டர்கள் பிரச்னை செய்ததால் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  முதல்வர் ஊரில் இல்லாத நிலையில் ரெய்டு ; குறிவைக்கப்படும் செந்தில்பாலாஜி

 முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் குறிப்பாக அவரது சகோதரர் அசோக் இல்லத்திலும் நடைபெறும் சோதனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மின்சார துறையில் நிலக்கரி கொள்முதலில் முறைகேடு, டாஸ்மாக் மதுபான விற்பனையில் ஊழல், டெண்டர் விடுவதில் பாரபட்சம் என செந்தில்பாலாஜி மீது அடுக்கடுக்கான புகார்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுகவும் தொடர்ந்து முன் வைத்து வரும் நிலையில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. கூடுதலாக, வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்துள்ளதாகவும் பல கோடி ரூபாயில் கரூரில் புது வீடு கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

ஆளுநரிடம் மனு கொடுத்த அதிமுக – பாஜக ; ஐ.டி.ரெய்டுக்கு காரணமா ?Minister Senthil Balaji :  ‘வெளிநாடு சென்ற முதல்வர், அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் ரெய்டு’ குறி யாருக்கு..?

 

விழுப்புரத்தில் விஷ சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு தார்மீக பொறுப்பேற்று மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் பாஜகவும் அதிமுகவும் நேரடியாக சென்று புகார் பட்டியலை தந்த நிலையில் இப்போது இந்த வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது, ஒருவேளை ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இந்த தகவலை தெரிவித்தபின்தான் இப்படியான சோதனை நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஏற்கனவே, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், அவருக்கு வருமான வரித்துறை மூலம் புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
Embed widget