Karur: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நிறைவடைந்த சோதனை.. கரூரில் இருந்து கிளம்பிய அமலாக்கத்துறை!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை. பாதுகாப்பு பணியிலிருந்த மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் கிளம்பிச் சென்றனர். 6 இடங்களில் சோதனை நிறைவு.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை 4 இடங்களிலும் புதிய 2 - இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் சோதனை நிறைவு - பாதுகாப்பு பணியிலிருந்த மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் கிளம்பிச் சென்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நான்கு இடங்களில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் செங்குந்தபுரத்தில் உள்ள பைனான்ஸ் மற்றும் அம்பாள் நகரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்று பல்வேறு 2 பைகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற அதிகாரிகள் சோதனை நிறைவு பெற்றது.
குஜராத் மாநிலத்தைச் சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தனலட்சுமி மார்பல்ஸ் மற்றும் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற நிலையில், தனலட்சுமி மார்பிள்ஸ் கடையில் சோதனை நிறைவு பெற்றது. வீட்டில் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. புதிதாக சோதனை இராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் அலுவலகம் மற்றும் வீடு செந்தில் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.
லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் சிறிது நேரத்தில் சோதனை நிறைவு பெற்று பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்று அதிகாரிகள் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் நள்ளிரவு சோதனை. ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் உரிமையாளர் செந்தில் என்பவருக்கு சொந்தமான அலுவலகத்தில் சோதனை இரவிலும் தொடர்ந்து நள்ளிரவு 1.15 மணிக்கு நிறைவு பெற்றது என மொத்தம் 6 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் சோதனை நிறைவு. இன்னலில் பாதுகாப்பு பணிக்காக வந்த மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியிலிருந்து கிளம்பிச் சென்றனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets