மேலும் அறிய

PM Modi Cabinet: 24 மணி நேரம் ஓவர்..! இலாகாக்களை ஒதுக்காத பிரதமர் மோடி - தவிக்கும் பாஜக - நடுங்கும் கூட்டணி

PM Modi Cabnet: பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றும், இதுவரை யாருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படாதது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

PM Modi Cabnet: மத்திய அமைச்சரவையில் இலாகாக்களை ஒதுக்குவதில், கூட்டணி கட்சிகளால் பாஜக நெருக்கடியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி தலைமையில் அமைச்சரவை..!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில், பாஜக 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்தாலும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கீழ் செயல்படும், சில மாநில கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அதைதொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மோடி நேற்று பதிவேற்றார். அவரோடு சேர்த்து 30 கேபினட் அமைச்சர்கள் உட்பட, 72 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

ஒதுக்கப்படாத இலாகாக்கள்..!

மோடி தலைமையிலான அமைச்சரவையில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, இந்துஸ்தன் அவாம் மோச்சா, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைதொடர்ந்து, மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டமும் தொடங்கியுள்ளது. ஆனால், தற்போது வரை யாருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படாதது சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவும் பாஜகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.

சிவசேனா போர்க்கொடி:

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 எம்.பிக்களை கொண்டுள்ளது. ஆனால், அக்கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இரே ஒரு இணையமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரண்டு எம்.பிக்களை மட்டுமே கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரே ஒரு எம்.பி., ஆன ஜிதன் ராம் மஞ்சிக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 7 எம்.பிக்களை கொண்ட தங்களுக்கு, ஒரே ஒரு இணையமைச்சர் பதவியா என, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி நிர்வாகிகள்போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

காங்கிரஸ் கேள்வி..

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பிரதம மந்திரி பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணிநேரம் ஆகியும் இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே நடுக்கம்!” என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., ஆன மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள்ள டிவிட்டர் பதிவில், “இலாகாக்களை ஒதுக்குவதில் தாமதம் ஏன்? பங்குச்சந்தை ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் இருவர் பதவி தருமாறு மோடிக்கு அழுத்தம் கொடுக்கிறார்களா? இந்த ஊழலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களில் ஒருவரை மோடி நிதியமைச்சர் ஆக நியமிப்பாரா?” என குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியில் பாஜக?

நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர், வலுவான இலாகாக்கள் தங்கள் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என கோரி வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டும் எனவும் பொதுவெளியிலேயே கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பாஜக நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget