மேலும் அறிய

PM modi: "அவங்க என்ன வேணா பண்ணட்டும்.. நாங்க இப்படியே தான் இருப்போம்" - பிரதமர் மோடி ப்ராமிஸ்

PM modi On US Tariff: அமெரிக்கா கூடுதல் வரி என்ற பெயரில் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், விவசாயிகளை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PM modi On US Tariff: அமெரிக்காவின் வரி அழுத்தம் அதிகரித்தாலும், அதனை அரசு தாங்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி பேச்சு:

இந்திய பொருட்கள் மீதான அமரிக்காவின் கூடுதல் வரி விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதனால், உள்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள வியாபாரிகள் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக தங்களது கடைகளுக்கு வெளியே விளம்பரம் செய்யவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

”அழுத்தம் அதிகரித்தாலும்..” - பிரதமர் மோடி

அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். தொடர்ந்து பேசுகையில், “எவ்வளவு அழுத்தம் அதிகாரித்தாலும் பரவாயில்லை. அதனை எதிர்கொள்ளும் வகையில் நாம் நம்மை தொடர்ந்து வலிமைப்படுத்திக் கொண்டே இருப்போம். இன்று உலகம் முழுவதும் பொருளாதாரம் சார்ந்த அரசியல் செய்வதில் அனைவரும் தீவிரமாக உள்ளனர். 

ஆனால், அகமதாபாத் மண்ணிலிருந்து சிறு தொழில்முனைவோர், கடைக்காரர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் காந்திஜியின் மண்ணில் ஒன்றை சொல்கிறேன். சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் அல்லது என் நாட்டின் கால்நடை வளர்ப்பாளர்களாக இருந்தாலும் சரி, உங்கள் நலன்கள் மோடியின் முதன்மையான முன்னுரிமை என்று நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எனது அரசாங்கம் எப்போதும் உங்களைப் பாதுகாக்கும், உங்களுக்கு எந்தத் தீங்கும் வர அனுமதிக்காது.

”சுதேசி பொருட்களை வாங்குங்கள்”

இது பண்டிகைகளின் காலம். இப்போது நவராத்திரி, விஜயதசமி,தீபாவளி ஆகியவை அடுத்தடுத்து வருகின்றன. இவை நமது கலாச்சாரத்தின் கொண்டாட்டங்கள், ஆனால் அவை தன்னம்பிக்கை கொண்டாட்டங்களாகவும் இருக்க வேண்டும். எனவே, நாம் நம் வாழ்வில் ஒரு மந்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எனது வேண்டுகோளை மீண்டும் ஒருமுறை உங்களிடம் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் எதை வாங்கினாலும் அது 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கட்டும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு நமது நாட்டு குடிமக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அலங்காரப் பொருட்களாக இருந்தாலும் சரி, பரிசுப் பொருட்களாக இருந்தாலும் சரி, நமது சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களைத் தேர்ந்தெடுப்போம். பிற நாடுகளிலிருந்து பெறப்படும் பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்கவும் வணிகங்களை நான் ஊக்குவிக்கிறேன். இந்த சிறிய ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நமது நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்” என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கு பதிலடி:

அமெரிக்காவின் விவசாயப் பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்து விட மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாகவே, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி, இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விகித்துள்ளது. இதில் 25 சதவிகித வரி ஏற்கனவே அமலுக்கு வந்த நிலையில், அடுத்த 25 சதவிகிதமும் ஒரு சில நாட்களில் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தான், அமெரிக்கா வரிகள் மூலம் அழுத்தம் கொடுத்தாலும், இந்திய நலன்களை காப்பதில் அரசின் முடிவு மாறாது என உறுதிபட தெரிவித்துள்ளதோடு, வெளிநாட்டு பொருட்களை சார்ந்து இருப்பதை குறைக்கவும் நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Salary Hike: குஷியோ குஷி.! ரூ.12 ஆயிரத்திலிருந்து 18ஆயிரமாக ஊதியம் அதிகரிப்பு.! ஊழியர்கள் கொண்டாட்டம்
குஷியோ குஷி.. இரண்டு மடங்காக உயர்ந்த ஊதியம் .! ஊழியர்கள் கொண்டாட்டம்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
மதுரைக்கும், கோவைக்கும்
மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO"... பாஜகவின் பழிவாங்கும் சதியை முறியடிப்போம்- சீறும் மு.க.ஸ்டாலின்
Embed widget