மேலும் அறிய

O Panneerselvam: பிரதமர் மோடிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி! திணறடிக்கும் ஓபிஎஸ்

துணை முதல்வர் பதவி எனக்கு கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்டது என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்:

காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி சார்பில், 2024 ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட  தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முத்தையால் பேட்டை ஆர்.வி. ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டு ஓபிஎஸ் க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ்-க்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் 25 லட்சம் ரூபாய் கழக நிதி வழங்கினார்.

டம்மி பதவி:

விழாவில் சிறப்புரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், “ஜெயலலிதா எனக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார். ஆனால் கட்சி உடைந்து விடக்கூடாது என்று நான் எடுத்த முடிவிற்கு, துணை முதலமைச்சர் பதவி நான் வேண்டாம் என கூறினேன். அது டம்மி பதவி அதிகாரம் இல்லாத பதவி. என்னை கட்டாய படுத்தி அந்த பதவி கொடுத்தார்கள்.

இரட்டை இலை வழக்கு தற்காலிகமாக தான் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த மாதம் 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்பொழுது நாம் தான் வெற்றி பெறுவோம் . நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தொடர்வதற்கு முழு ஆதரவாக இருந்தவர் பிரதமர் மோடி.

அவரை அழைத்து பிரதமர் மோடி  தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்கலாம் என தெரிவித்த அடுத்த வாரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அப்படிப்பட்ட துரோகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி” என விமர்சனம் செய்தார்.

அடுத்ததும் மோடி தான்:


இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர், “ கிளாம்பாக்கத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் 90 சதவீதம் பேருந்து நிலைய பணிகள் முடிக்கப்பட்டன அதன் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாட்டை நாளை யார் ஆளப்போவது  என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல். மாண்புமிகு பாரத பிரதமர் 10 ஆண்டு காலம் ஆட்சி சிறப்பாக இருந்தது அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கூட நரேந்திர மோடி தான் பாரதப் பிரதமராக வரவேண்டும்” என தெரிவித்தார்.

பொறுத்திருந்து பாருங்கள்:

தொடர்ந்து பேசிய அவர், “உறுதியாக நாங்கள் கூறிய நிதியை பொங்கல் தொகுப்பு அரசு வழங்க வேண்டும் இல்லை என்றால் அதைக் கொடுக்கிற வரைக்கும் எங்களுடைய கோரிக்கை வலுவாக இருக்கும். டெல்லியில் ஆளுகின்ற நிலை தேசிய கட்சிகளுக்கு தான் இருக்கிறது ஆகவே நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரையிலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தான் கூட்டணி அமையும்” என்றார்.

அப்போது அவரிடம்,  ரகசியங்கள் வெளியே சொல்ல வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ”பொறுத்திருந்து பாருங்கள்” என ஓபிஎஸ் கூறினார்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget