மேலும் அறிய

‛அறந்தாங்கியில் நான் வைத்த எம்.ஜி.ஆர்., சிலையை ஜெயலலிதா கேட்டார்... ஆனால்...’ - நினைவுகளை பகிர்ந்த திருநாவுக்கரசர்!

நான் திமுகவிலும் இருந்திருக்கிறேன் என நமக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கிறார் மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்...அவரது ப்ளாஷ் பேக் பக்கங்கள் கீழே!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைகளில் மிகவும் பரிச்சயமானவர்கள் பட்டியலில் சு.திருநாவுக்கரசரை முன்னிறுத்திவிடலாம். தற்போதைய மத்திய அரசில் திருச்சி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் இவர் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர்.ஆல் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். சட்டக்கல்லூரி மாணவராக இருந்தவர் அதிமுக அரசின் கீழ் ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் ஆட்சியில் கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 


‛அறந்தாங்கியில் நான் வைத்த எம்.ஜி.ஆர்., சிலையை ஜெயலலிதா கேட்டார்... ஆனால்...’ - நினைவுகளை பகிர்ந்த திருநாவுக்கரசர்!

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி என தமிழ்நாட்டின் மறைந்த மூன்று முக்கிய முதலமைச்சர்களிடமும் அந்தந்த காலக்கட்டங்களில் நெருக்கமாக நட்பு பாராட்டியவர் திருநாவுக்கரசர். ‘எம்.ஜி.ஆர்.,ம் கருணாநிதியும் எனக்கு ஒன்னுதான்’ என்றே தனது பேட்டியைத் தொடங்குகிறார். இவர்களுடனான தனது ப்ளாஷ்பேக்கை அசைப்போட்ட அவரின் பேட்டியில் இருந்து சில துளிகள், ‘எம்.ஜி.ஆர் இறந்த சமயம் அவருக்கு அறந்தாங்கியில் சிலை வைத்தேன். எம்.ஜி.ஆர்.,க்காக முதன்முதலில் சிலை வைத்தது நான்தான். அதன்பிறகுதான் சென்னையில் அதிமுக அலுவலகத்தில் சிலை வைக்கப்பட்டது. நான் வைத்த சிலையை சென்னை அலுவலகத்துக்குத் தரும்படி அப்போது ஜெயலலிதா என்னிடம் கேட்டார். சிலை நிறுவிவிட்டதால் தரமுடியாது என மறுத்துவிட்டேன். அதன்பிறகுதான் ஜெயலலிதா புதிய சிலையை அதிமுக அலுவலகத்தில் நிறுவினார்.


‛அறந்தாங்கியில் நான் வைத்த எம்.ஜி.ஆர்., சிலையை ஜெயலலிதா கேட்டார்... ஆனால்...’ - நினைவுகளை பகிர்ந்த திருநாவுக்கரசர்!

நான் நிறுவிய எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தது கருணாநிதிதான். உண்மையில், எம்.ஜி.ஆர்., ஐச் சந்திப்பதற்கு முன்பே நான் கருணாநிதியை சந்தித்திருந்தேன். நான் எட்டாவது படிக்கும்போது எங்கள் ஊரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேச அவர் வந்திருந்தார். அவர் பேச வருகிறார் என்பதால் அரைநாள் விடுப்பு கொடுத்தார்கள். சிறுவர்கள் நாங்கள் போய் அமர்ந்து அவர் பேசியதைக் கேட்டோம். அதிமுகதான் என் அரசியல் அறிமுகம் என நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் நான் மாணவனாக இருந்தபோது திமுகவில் இருந்திருக்கிறேன். எங்கள் தொகுதியின் திமுக மாணவரணிச் செயலாளராகப் பணியாற்றி இருக்கிறேன். அப்போதிருந்து எனக்குக் கருணாநிதியுடன் அறிமுகம் இருந்தது. அது பின்னாளில் அதிமுக அமைச்சரவையில் நான் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் தொடர்ந்தது. அவரது வாழ்நாள் முழுக்க அவரோடு நான் சுமுகமான நட்பில் இருந்தேன். எந்த ஒரு அரசியல் தலைவரையும் தனிப்பட்டு தாக்கியோ அல்லது அவர்களது குடும்பத்தை விமர்சித்தோ நான் இதுநாள் வரை பேசியது இல்லை. மூன்று முதல்வர்களுடனும் ஒரு இணக்கமான நட்பில் இருந்ததற்குக் காரணமும் அதுதான்’ என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
Embed widget