மேலும் அறிய

இந்த இரண்டு சாணக்கியர்களும் பாஜகவிற்கு நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் - தமிமுன் அன்சாரி

அசைக்க முடியாத சக்தி எனக்கூறிய மோடியை நாட்டு மக்கள் அசைத்து, எச்சரித்துள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

பாஜக அசைக்க முடியாத சக்தி எனக்கூறிய மோடியை நாட்டு மக்கள் அசைத்து, எச்சரித்துள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தேர்தல் முடிவு தொடர்பாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

மஜக நிர்வாகி இல்ல திருமண விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வாணாதிராஜபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:


இந்த இரண்டு சாணக்கியர்களும் பாஜகவிற்கு நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் - தமிமுன் அன்சாரி

செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு நூற்றுக்கு நூறு வெற்றி வாகை சூடும் வகையில் வாக்களித்த அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணிக்கு தலைமையேற்று புயல்வேக பரப்புரை முன்னெடுத்து இந்த சிறப்பான வெற்றியை சாத்திய படுத்தியதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வாக்காளர்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு விதமான எண்ண அலைகளை எதிரொலித்து உள்ளது. இந்தியா கூட்டணி மாபெரும் எழுச்சியை பெற்று மக்களின் நம்பிக்கைக்குரிய எதிர்க்கட்சிகளின் சங்கமமாக உருவெடுத்துள்ளது. மிக முக்கியமான பாஜகவின் வாக்குகளை குறைத்தும், காங்கிரஸ்க்கு கூடுதல் வாக்குகள் அளித்து இந்திய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர். நாடு முழுவதும் முதல் தலைமுறையினர் விருப்ப தேர்வு இந்தியா கூட்டணியாக அமைந்திருக்கிறது. தாங்கள் அசைக்க முடியாத சக்தி எனக்கூறிய பிரதமர் மோடியும், அவர்சார்ந்த பாஜகவையும் மக்கள் எச்சரித்துள்ளனர். வேகத்தடையை உருவாக்கி, மனம்போன போக்கில் செயல்படாமல், அரசியல் சாசன சட்டத்தின் மாண்புகளை சீர் குலைக்க முடியாது என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.  


இந்த இரண்டு சாணக்கியர்களும் பாஜகவிற்கு நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் - தமிமுன் அன்சாரி

இனி ராமரை வைத்து பாஜக அரசியல் செய்ய முடியாது

உத்திரபிரதேசத்தில் எதிர்பாராத எழுச்சியை வெளிப்படுத்திய வாக்காளர்கள், குறிப்பாக அயோத்தியில் பொதுமக்கள் தக்க பாடத்தை பாஜகவிற்கு புகட்டியுள்ளனர். இனி ராமரை வைத்து பாஜக அரசியல் செய்ய முடியாது. இந்தியர்கள் ஆகிய நாங்கள் இனி அண்ணன் தம்பிகளாகதான் இருப்போம், மீண்டும் அயோத்தி மண்ணையும், ராமரையும் காண்பித்து இந்து, முஸ்லிம் மற்றும் ஏனைய மக்களையும் இனி பிரித்திட அனுமதித்திட மாட்டேன் என்ற உறுதியான செய்தியினை வழங்கி அயோத்தி அடங்கிய பைசலாபாத் தொகுதியில் பெரும் தோல்வியை பாஜகவிற்கு வாக்காளர்கள் கொடுத்துள்ளனர். இனிவரும் காலங்களில் ஆவது பாஜகவினர் மக்களின் தீர்ப்பை புரிந்து கொண்டு மதக்கலவரம் ஏற்படும் வண்ணம் பேசுவது, வெறுப்பு அரசியலை பரப்புவது, மக்கள்களின் இணக்கங்களை உடைக்க முயல்வது போன்ற தீய செயல்களில் இருந்து விடுவித்து கொண்டு, நாட்டின் ஒருமைப்பாடு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


இந்த இரண்டு சாணக்கியர்களும் பாஜகவிற்கு நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் - தமிமுன் அன்சாரி

பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி குறைந்துள்ளது

தொடர்ந்து பேசியவர், இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி குறைந்திருப்பதை ஆதாரத்துடன் தெரிவித்து இருப்பதாகவும், ஒப்புகைச் சீட்டு முறையை கொண்டு வந்து வாக்கு எண்ணிக்கையின் போது ஈவிஎம் மற்றும் ஒப்புகைச்சீட்டு இரண்டையும்  சரி பார்த்து முடிவுகளை அறிவிக்க வேண்டும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராவதால் நேருவுடன் மோடியை ஒப்பிடுவது சரியல்ல. பாஜகவிடம் எந்த விதத்திலும் அடக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்றார்.

பாஜகவிற்கு வேகத்தடை

மூன்றாவது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் 10 ஆண்டுகளில் சிதைந்து கிடப்பதாகவும், அனைத்து மக்களின் உணர்வுகளை மதித்து பிரதமர் மோடி ஆட்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார். பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ்குமார் ஆகிய இரண்டு சாணக்கியர்கள் இருப்பதாகவும், நாடாளுமன்றத் தொகுதி அதிகப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கருத்து தெரிவித்தார். மேலும் இரண்டு சாணக்கியர்களும் பாஜகவில் நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
ஆவணி மாத ராசி பலன்
ஆவணி மாத ராசி பலன் - மேஷம் முதல் கடகம் வரை!!!
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
Embed widget