மேலும் அறிய

Makkal Needhi Maiam | ‛தலைவர் பாதி... செயலாளர் பாதி... கலந்து செய்த கலவை நான்’ ம.நீ.ம., ஆளவந்தான் ஆனார் கமல்!

தலைவர் பாதி... பொதுச் செயலாளர் பாதி... என மநீம.,வில் இனி ஆளவந்தானாக கமல் ஆளுமை செய்வார் என்கிறார்கள், அவரது தொண்டர்கள்.!

தற்போது அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை செய்வேன் என கடந்த மே 24ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர்  கமலஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடந்த இணையவழி கலந்துரையாடலில் மநீம தலைவர்  கமலஹாசன் உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது..

'கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல் நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மண், மொழி மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும். நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களை செய்திருக்கிறேன். அதன்படி கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச்செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன். புதிதாக இரண்டு அரசியல் ஆலோசகர்கள், 2 துணைத் தலைவர்கள், 3 மாநில செயலாளர்கள், நிர்வாக குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்' என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

மேலும் 'புதிய மாநில செயலாளர்கள் ஏற்கனவே நமது கட்சியின் வேட்பாளர்களாக கடந்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டவர்கள் தான். எனினும் அவர்களை பற்றி மீண்டும் இங்கே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்'. சிவ. இளங்கோ சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர் மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராக சட்ட போராட்டங்களை தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்'.

'செந்தில் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு சமூக பணி செய்ய வேண்டும் என்ற தனது இலட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர். நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர், தகவல் அறியும் உரிமை சட்டத்தை முழுமையாக பயன்படுத்துவது என மக்கள் நலன்சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்'

'சரத் பாபு, தன் கடின உழைப்பினாலும் திறமையாலும் வெற்றிகரமான தொழில் முனைவோராக திகழ்பவர். ஃபுட் கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்'

புதிய நியமனங்கள்.

 
பழ. கருப்பையா - அரசியல் ஆலோசகர் 
பொன்ராஜ் வெள்ளைச்சாமி - அரசியல் ஆலோசகர் 
ஏ.ஜி மௌரியா - துணைத்தலைவர் - கட்டமைப்பு 
தங்கவேலு - துணைத்தலைவர் களப்பணி மற்றும் செயல்படுத்துதல் 
செந்தில் ஆறுமுகம் - மாநில செயலாளர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தித் தொடர்பு 
சிவ. இளங்கோ - மாநிலச் செயலாளர் கட்டமைப்பு 
சரத்பாபு - மாநில செயலாளர் தலைமை நிலையம் 
ஸ்ரீபிரியா சேதுபதி - நிர்வாகக்குழு உறுப்பினர் 
ஜி. நாகராஜன் நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைமைப் பண்பு மிக்க இவர்களை என்னோடு சேர்த்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்கி இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்து கட்சியினை உருவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார் கட்சி தலைவர் கமல்ஹாசன். ஏற்கனவே தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் கமல், பொதுச்செயலாளர் பொறுப்பையும் தன்வசமாக்கி, அதை அவரே அறிவித்துள்ளார். இதன் மூலம், கடவுள் பாதி, மிருகம் பாதி என்கிற ஆளவந்தான் பாடல் வரியை போல, தலைவர் பாதி... பொதுச் செயலாளர் பாதி... என மநீம.,வில் இனி ஆளவந்தானாக கமல் ஆளுமை செய்வார் என்கிறார்கள், அவரது தொண்டர்கள்.!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Embed widget