மேலும் அறிய

நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தலைமறைவாக இருந்த  சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கரூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி அதிமுக பேரூர் கழக துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், இருவரது மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 ல் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். மகேஷ் இருவரையும் 12.09.24 வரை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி போலீசாரும், ஆள் கடத்தல்  மற்றும் கொலை மிரட்டல் விடுத்த வழக்கை வாங்கல் போலீசாரும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

 

இந்த வழக்கு தொடர்பாக எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் சுமார் 30 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்த சிபிசிஐடி போலீசார் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது, நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய   எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு  30 - ஆம் தேதி  தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக முகாந்திரம் உள்ளதால் தேவைப்பட்டால் இவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருந்ததாக கூறப்படுகிறது.

 

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கரூரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருவருக்கும் பரிசோதனை மேற்கொண்டனர்.

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

 

பின்னர், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சேகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஆர் எம். மகேஷ் உத்தரவிட்டார்.

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 30 ஆம் தேதி முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த  சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Embed widget