மேலும் அறிய

நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தலைமறைவாக இருந்த  சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கரூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி அதிமுக பேரூர் கழக துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், இருவரது மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 ல் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். மகேஷ் இருவரையும் 12.09.24 வரை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி போலீசாரும், ஆள் கடத்தல்  மற்றும் கொலை மிரட்டல் விடுத்த வழக்கை வாங்கல் போலீசாரும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

 

இந்த வழக்கு தொடர்பாக எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் சுமார் 30 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்த சிபிசிஐடி போலீசார் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது, நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய   எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு  30 - ஆம் தேதி  தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக முகாந்திரம் உள்ளதால் தேவைப்பட்டால் இவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருந்ததாக கூறப்படுகிறது.

 

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கரூரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருவருக்கும் பரிசோதனை மேற்கொண்டனர்.

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

 

பின்னர், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சேகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஆர் எம். மகேஷ் உத்தரவிட்டார்.

 


நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 30 ஆம் தேதி முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த  சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.