மேலும் அறிய

“எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதாவது ஏற்பட்டால்..” - பகிரங்க எச்சரிக்கை விடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு திமுக அரசால் ஏதாவது ஏற்பட்டால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் தற்கொலை படையாக மாறுவோம், என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளர்  எடப்பாடியார் மீது பொய் வழக்கு பதிவு செய்த விடியா திமுக ஆட்சியில்   செயல்படும் காவல்துறையை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திருவண்ணாமலை அறிவாளி பூங்கா அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக  முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு கண்டண உரை எழுப்பினார். 

 


“எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதாவது  ஏற்பட்டால்..” - பகிரங்க எச்சரிக்கை விடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்: 

”விடியா திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு மட்டுமல்ல முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத ஒரு செயலிழந்த துறையாக காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு  இணையாக செயல்பட்டது. மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வர் மீது இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு போடப்பட்டதற்கு காரணம் தமிழக முதல்வர், இதற்கு தூண்டுதலாக இருந்தவரும் முதல்வர்  என்றும், தற்போது திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை ஸ்டாலின் சொல்லும் நபர்கள் மீதும், அதிமுக மீதும் வழக்கு போடும் ஏவல் துறையாக செயல்படுகிறது” என்றார். அதிமுக மீது ஒரு வழக்கு அல்ல ஒரு கோடி வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள எங்களாலும் எங்கள் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியாலும் முடியும் என்றார்.


“எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதாவது  ஏற்பட்டால்..” - பகிரங்க எச்சரிக்கை விடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி

 

 

”அதிமுக இயக்கம் கருணாநிதியை பார்த்துள்ளது, அப்போது கருணாநிதியால் புரட்சி தலைவி மீது வழக்கு போடப்பட்டது. அத்தனை வழக்குகளும் நீதி மன்றங்கள் மூலமாக சந்தித்தவர்கள் அதிமுக கட்சியினர்.  தொடர்ந்து இந்த இயக்கத்தின் மீதும், தொண்டர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த இயக்கத்தை முடக்கி விடலாம், அழித்துவிடலாம் என்றும் பகல் கனவு கண்டு வருகிறார்.  அதிமுக என்ற இயக்கம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால்  உருவாக்கப்பட்டு பல்வேறு சோதனைகளை கடந்தும் வழக்குகளை கடந்தும் தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்த இயக்கம் , இந்த இயக்கத்தை அழிக்க யார் நினைத்தாலும் சரி 


“எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதாவது  ஏற்பட்டால்..” - பகிரங்க எச்சரிக்கை விடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி

 

அதிமுக இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று தமிழகம் முழுவது சுற்று பயணம் மேற்கொண்டுள்ள  எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக கட்சியினரால் ஏதாவது ஏற்பட்டால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் உட்பட நாங்கள் அனைவரும்  தற்கொலை படையாக மாறுவோம், மனித வெடிகுண்டாக மாறுவதற்கு கூட நாங்கள் தயங்க மாட்டோம் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்காக எங்களுடைய உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுகிறேன். திமுக ஆட்சி பொறுப்பேற்று மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக முன்னாள் அமைச்சர்கள் மீதும் கழகத்தின் பொதுச் செயலாளர் மீதும் வழக்கு பதிவு செய்து  செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
TNPSC Recruitment: நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
TNPSC Recruitment: நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
3ஆவது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்!
3ஆவது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்!
TN Cabinet Reshuffle :
TN Cabinet Reshuffle : "மேயர்களுக்கு அடுத்து அமைச்சர்கள்தான்” நீக்கமா ? மாற்றமா ? பதற்றத்தில் தமிழக கேபினட்..!
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Indian 2 : ப்ரோமோஷன் பத்தலையே என்ற நெட்டிசன்கள்... ஆகாயத்தில் இந்தியன் 2 போஸ்டரை பறக்கவிட்ட ஷங்கர்
Indian 2 : ப்ரோமோஷன் பத்தலையே என்ற நெட்டிசன்கள்... ஆகாயத்தில் இந்தியன் 2 போஸ்டரை பறக்கவிட்ட ஷங்கர்
Embed widget