மேலும் அறிய

‛அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறாரா ஓபிஎஸ்?’ ஆலோசனை கூட்டத்திற்குப் பின் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!

நிர்வாகிகள் யாரும் சின்ன குழந்தைகள் அல்ல. அவர்களுக்கு எல்லாம் தெரியும். யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம். ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க வேண்டும்

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சற்று முன் நடந்தது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

 

‛‛கழகத்தை வழிநடத்த வேண்டும் என்கிற வகையில், எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 தலைமை கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். 4 பேர், வரவில்லை என்று கடிதம் கொடுத்துள்ளார்கள். பண்ருட்டி ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், புத்தி சந்திரன், ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் மருத்துவ காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என கடிதம் அனுப்பியுள்ளனர். இவர்களை தவிர பெரும்பான்மையானவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

இதில் வரும், 11.7.2022 ல் பொதுக்குழு கூட்ட அழைப்பிதழை தபாலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அது மட்டுமின்றி பல பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் சொல்ல வேண்டியதை சொல்கிறேன். சொல்ல முடியாததை சொல்ல முடியாது. 

முன்னாள் சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக சட்ட விதிகளை தெளிவாக கூறியுள்ளார். பிரிவு 20 அ7 ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழலில், கழகத்தை வழிநடத்த தலைமை கழக நிர்வாகிகள் அதிகாரம் படைத்தவர்கள். தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாரா, புரிந்தும் புரியாமல் இருக்கிறாரா, அறிந்தும் அறியாமல் இருக்கிறாரா ஓபிஎஸ் என்பது தெரியவில்லை. தூங்குபவரை எழுப்ப முடியாது. 

ஓபிஎஸ் பிளக்ஸ் போர்டு மாற்றும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து துரோகத்தின் அடையாளமாக அண்ணன் ஓபிஎஸ் உள்ளார். ஆரம்ப காலத்தில் இருந்து தான் சார்ந்த இயக்கத்திற்கு செய்திருக்கிற துரோகங்கள் நிறைய. இது குறித்து முன்னாள் அமைச்சர் உதயக்குமார் பேட்டியளித்துள்ளார். அப்படி இருக்கும் போது, அவரை எப்படி நமது அம்மா நாளிதழில் அவரது பெயரை வைத்திருக்க முடியும். உங்கள் கேள்விகளுக்கான அனைத்து கேள்விகளுக்கு வரும் 11 ம் தேதி பொதுக்குழுவில் பதில் கிடைக்கும். 

ஜெயலலிதா மறைவிற்குப் பின், நடந்தவற்றை எல்லாம் பாருங்கள். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை பார்த்து அர்ப்பணிப்போடு ஆட்சி நடக்கிறது என்று கூறினால், எந்த தொண்டன் ஏற்பான்? பொருளாளர் பதவியில் நீடிப்பாரா, மாட்டாரா என்பதை பொதுக்குழு முடிவு செய்யும். நிர்வாகிகள் யாரும் சின்ன குழந்தைகள் அல்ல. அவர்களுக்கு எல்லாம் தெரியும். யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம். ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க வேண்டும் என்பது தான், ஒட்டுமொத்த கட்சியின் நிலைப்பாடும் கூட,’’

என்று அவர் செய்தியாளர்களிடம் பதிலளித்தார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.