வைகோவிற்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குதோ , இல்லையோ ? ஆனால்..., - துரை வைகோ சொன்னது என்ன?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்கிறதோ இல்லையோ , கூட்டணி தொடரும் - துரைவைகோ

மதிமுக சங்க கட்டிடம் திறப்பு
சென்னை ரிப்பன் மாளிகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர் மறுமலர்ச்சி சங்க கட்டிடத்தை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பணியாளர்கள் மறுமலர்ச்சி சங்கத்தின் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சு.ஜீவன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசுகையில்,
யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அவர்களின் தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படி பேசுவார்கள். அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
மத்திய அரசின் ஒத்துழையாமைக்கு இடையே இந்த வளர்ச்சியை திடாவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் வழி நடத்துகிறார்.
திமுகவுக்கு மக்கள் 0 போடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பான கேள்விக்கு,
எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராக அவரின் வெளிப்பாட்டை கூறியுள்ளார். இது அவரின் உரிமை. ஆனால் மக்கள் தான் முடிவு செய்வார்கள். விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். எங்களுக்கு ஆதரவாக உள்ள தொகுதிகளை கண்டறிந்து, அதில் இன்னும் கவனம் செலுத்த உள்ளேன்.
2 பேர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளது குறித்த கேள்விக்கு..
சிறு, சிறு தவறு நடக்கவில்லை என்று சொல்லவில்லை. எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை தாண்டி சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. தலைவருக்கு ராஜ்ய சபா கிடைக்குதோ இல்லையோ, கூட்டணி தொடரும்.





















