மேலும் அறிய

Chengalpattu Banyan Tree : வெட்டப்பட்ட ஆலமரம்.. கதறி அழுது ஒப்பாரி வைத்த பெண்கள்.. கண்டனம் தெரிவித்த அன்புமணி..

"வெட்டப்பட்ட ஆலமரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்"

ஒப்பாரி 
 
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள சூனாம்பேடு ஊராட்சியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்நிலையில் இங்கு புதிய பேருந்து அமைவதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் ஆலமரத்தை அகற்றினர். இதனை கண்டித்து நேற்று பசுமை தாயகத்தினர் சார்பில் அகற்றப்பட்ட மரத்திற்கு இறுதி அஞ்சலி நடத்தப்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆலமரம் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு ஒப்பாரி வைத்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
 

Chengalpattu Banyan Tree : வெட்டப்பட்ட ஆலமரம்.. கதறி அழுது ஒப்பாரி வைத்த பெண்கள்.. கண்டனம் தெரிவித்த அன்புமணி..
மரத்திற்கு இரங்கல் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி
 
இது தொடர்பாக பசுமை தாயகம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஐயப்பன் மற்றும் பசுமை தாயகத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர் பசுமை தாயகம் இணை பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில துணை பொது செயலாளர் கண்ணன் கலந்துக்கொண்டு  வெட்டப்பட்ட மரத்திற்கு இரங்கல் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மரத்தை வெட்டிய அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் உதயகுமார் பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் சாந்தமூர்த்தி ஒன்றிய செயலாளர் காளிதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

Chengalpattu Banyan Tree : வெட்டப்பட்ட ஆலமரம்.. கதறி அழுது ஒப்பாரி வைத்த பெண்கள்.. கண்டனம் தெரிவித்த அன்புமணி..
கிளைகளை மட்டுமே வெட்ட அரசு அனுமதி அளித்த நிலையில்..
 
இந்த நிலையில் இது தொடர்பாக ட்விட்டர் வலைதளத்தில் அன்புமணி ராமதாஸ் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் பதிவில், "செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரம் இருந்த 40 ஆண்டு ஆலமரம் சட்டவிரோதமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஆலமரம் வெட்டப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து பசுமைத்தாயகம் அமைப்பும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, கிளைகளை மட்டுமே வெட்ட அரசு அனுமதி அளித்த நிலையில் ஒட்டு மொத்த மரமும் சிலரால் வீழ்த்தப்பட்டது பெருங்குற்றம்.

Chengalpattu Banyan Tree : வெட்டப்பட்ட ஆலமரம்.. கதறி அழுது ஒப்பாரி வைத்த பெண்கள்.. கண்டனம் தெரிவித்த அன்புமணி..
 
பசுமைக் குழுக்கள்
 
இதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். 40 ஆண்டுகள் அரும்பாடுபட்டு வளர்க்கப்பட்ட ஆலமரம் சிலரின் சுயநலத்திற்காக வீழ்த்தப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. வெட்டப்பட்ட ஆலமரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது. அதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட மாநில,  மாவட்ட பசுமைக் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் முழு அளவில் செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget