மேலும் அறிய

விவசாய சட்டங்கள் குறித்து கங்கனா ரனாவத் மீண்டும் கருத்து: வெடித்த சர்ச்சை.!பாஜக, காங்கிரஸ் இருவரும் கண்டனம் .! 

ஹரியானா சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து பாஜக எம்.பி  கங்கனா ரனாவத் மீண்டும் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஹரியானா தேர்தல்:

ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான தேர்தலானது வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அங்கு ஆளும் கட்சியாக பாஜக தலைமையிலான அரசு பொறுப்பு வகித்தாலும், இந்த முறை மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டதால், ஹரியானா தேர்தலானது பாஜகவுக்கு சற்று சவாலானதாகவே பார்க்கப்படுகிறது.

கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து:

விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாநிலங்களில் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக ஹரியானா மாநிலம் இருந்தது.

இந்த தருணத்தில், சில நாட்களுக்கு முன்பு, மூன்று விவசாய சட்டங்கள் குறித்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் கருத்தானது , பாஜகவுக்கு நெருக்கடியை கொடுத்ததாக பார்க்கப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கங்கனா ரனாவத்தை கடுமையாக விமர்சித்தனர், பாஜக கட்சியினர் கூட அவரின் கருத்தில் இருந்து விலகியே இருந்தனர். மேலும் , பாஜக தலைமைகூட கங்கனா ரனாவத்தை கண்டித்து, இதுபோன்ற கருத்தை தெரிவிக்க வேண்டாம் எனவும் எச்சரித்ததாக கூறப்பட்டது.

மீண்டும் சர்ச்சை கருத்து:

இந்நிலையில், மீண்டும் விவசாய சட்டங்கள் குறித்து கங்கனா ரனாவத் கருத்தானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் தெரிவித்ததாவது “   இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கியமானவர்களாக விவசாயிகள் உள்ளனர். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நான் நினைக்கிறேன். சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களை, விவசாயிகளின் நலன்களை மனதில் கொண்டு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும், என்று நான் கைகளைக் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்" என சமீபத்தில் பேசியிருந்தார்.

காங்கிரஸ் கண்டனம்:

இது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவிக்கையில் “ விவசாயிகளுக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மையானது, பாஜகவின் ஒவ்வொருவரின் நரம்பிலும் உள்ளது என்பது நாடு முழுவதும் தெரிந்து விட்டது.


விவசாய சட்டங்கள் குறித்து கங்கனா ரனாவத் மீண்டும் கருத்து: வெடித்த சர்ச்சை.!பாஜக, காங்கிரஸ் இருவரும் கண்டனம் .! 

750 விவசாயிகள் உயிர்தியாகம் செய்த பிறகும், விவசாயிகளுக்கு எதிரான பாஜக மற்றும் மோடி அரசுகள் செய்த மாபெரும் குற்றத்தை உணரவில்லை, விவசாயிகளுக்கு எதிரான 3 கருப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பேசப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு எதிராக முள்கம்பி, கண்ணீர் புகை, ஆணி, துப்பாக்கி போன்றவற்றைப் பிரயோகித்த பாஜக அரசை இந்தியாவின் 62 கோடி விவசாயிகளால் என்றும் மறக்க முடியாத ஒன்று. இந்த முறை ஹரியானா மாநில மக்கள் உட்பட இதர மக்களும் தக்க பதிலளிப்பார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

பாஜக கண்டனம்:

இது தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளதாவது, `` விவசாயிகளின் நலன் கருதி ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற எம்.பி கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய கருத்திலிருந்து பாஜக விலகிக்கொள்கிறது. விவசாய மசோதாக்கள் மீதான பா.ஜ.க-வின் பார்வை இதுவல்ல. இது அவரது தனிப்பட்ட கருத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பா.ஜ.க சார்பில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட அவருக்கு அதிகாரம் இல்லை. இந்த அறிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்" என தெரிவித்திருந்தார்.

ஹரியான மாநில தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக எம்.பி கங்கனா ரனாவத்தின் கருத்தானது, அக்கட்சியினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான  டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட்  தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட் தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான  டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட்  தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட் தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
அன்பில் மகேஷ் அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பதில்லை - எச்.ராஜா
அன்பில் மகேஷ் அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பதில்லை - எச்.ராஜா
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த  தஞ்சாவூர் மேயர்
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்
Embed widget