மேலும் அறிய

தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!

விசாரணை நடத்திய இணை இயக்குநர், நிகிதா மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு விரிவான அறிக்கை அனுப்பினார்.

திருப்புவனம் அஜித் லாக்கப் மரணத்தில் புகார்தாரரான நிகிதா, தனது கல்லூரிப் பணியிலும் சர்ச்சையில் சிக்கி மாணவிகள் எதிர்ப்புக்கு உள்ளான  தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

திருப்புவனம் கோயிலுக்குச் சென்றபோது நகைகளைக் காணவில்லை என்றுகூறி கோயில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த விவகாரத்தில், அஜித் குமார் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்குள்ளாக புகார்தாரரான நிகிதா மீது பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

நிகிதாவின் நீள் பின்னணி!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா. 36 வயது அரசுக் கல்லூரிப் பேராசிரியரான இவர் கடந்த 2010ஆம் ஆண்டில், ஆசிரியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அரசுப் பணிகளை வாங்கித் தருவதாய்க் கூறி பலரிடம் பண வசூலில் ஈடுபட்டுள்ளார். திருமங்கலம் பச்சக்கோப்பன்பட்டியை சேர்ந்த பலரிடம் 16 லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பணத்தை திருப்பிக் கேட்டால் அவர்களை மிரட்டவும் செய்துள்ளார்.

நிகிதாவிடம் பணம் ஏமாந்த ராஜாங்கம், தெய்வம், வினோத்குமார் எனப் பலர் திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் என 6 பேர் மீது 2011-ஆம் ஆண்டு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதைய துணை முதல்வரின் பி.ஏ.வைத் தெரியும் என்று கூறி அவர் மோசடி செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜித் குமார் மரணம் பேசுபொருளானதை அடுத்து, பல்வேறு தரப்பினர் மதுரை சுற்றுவட்டாரத்தில் புகார் அளித்து வருகின்றனர். திருமணம் செய்து, கணவரையும் அவர் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

கல்லூரிப் பணியிலும் சர்ச்சை

இதற்கிடையில் நிகிதா, தனது கல்லூரிப் பணியிலும் சர்ச்சையில் சிக்கி மாணவிகள் எதிர்ப்புக்கு உள்ளான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக பணியாற்றிய கல்லூரியிலும் பல புகார்கள் எழுந்து, கடந்த ஆண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியது தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் ஆக நிகிதா பணிபுரிந்து வருகிறார். தனது துறைசார் பணிகளை முறையாக செய்யாதது, கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டுப்படாதது என அடுக்கடுக்கான புகார்களில் சிக்கியுள்ளார் நிகிதா.

மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

அவரை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று அங்கு படிக்கும் மாணவிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கி இருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய இணை இயக்குநர், நிகிதா மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு விரிவான அறிக்கை அனுப்பினார். எனினும் நிகிதாவுக்கு இருந்த செல்வாக்கால், அந்த அறிக்கை மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இப்போது நிகிதா மீது அடுக்கடுக்காகப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கைது செய்யப்படுகிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பன்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
6 மாதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள்! - புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு!
6 மாதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள்! - புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு!
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆ.ராசா அவதூறுக்கு பதிலடி ; திமுகவுக்கு அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை
ஆ.ராசா அவதூறுக்கு பதிலடி ; திமுகவுக்கு அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பன்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Embed widget