மேலும் அறிய

’’பழசை மறந்துட்டீங்களா?’’ இபிஎஸ் மீது அதிருப்தி!- சைலண்ட் மோடுக்குச் சென்ற ஜெயக்குமார்!

அதிமுக என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஜெயக்குமார்தான். அந்த அளவுக்கு தினமும் செய்தியாளர் சந்திப்பு கொடுத்து எதிர்க் கட்சிகளை துவம்சம் செய்து கொண்டிருப்பார்.

அதிமுகவின் முக்கிய முகமாக இருக்கக் கூடிய ஜெயக்குமார், கடந்த சில வாரங்களாக வெளியே தலைகாட்டாமல் இருந்து வருவது ஏன்..அவருக்கும் ஈபிஎஸ் க்கும் நடுவே என்ன பிரச்சனை? என்பன குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதிமுக மூத்த நிர்வாகி, முன்னாள் அமைச்சர், ஈபிஎஸ்ஸின் ரைட் ஹேண்ட் என கட்சியில் பவர்புல்லாக இருப்பவர் ஜெயக்குமார். அதிமுக என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஜெயக்குமார்தான். அந்த அளவுக்கு தினமும் செய்தியாளர் சந்திப்பு கொடுத்து எதிர்க் கட்சிகளை துவம்சம் செய்து கொண்டிருப்பார்.

பாஜக கூட்டணிதான் தோல்விக்குக் காரணம்

கடந்த 2021 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்தது. அதிமுகவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமே பாஜக கூட்டணிதான் என விமர்சனங்கள் சூழ்ந்தது. பின்னர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணி முறிந்தது.

அப்போது ’’25 வருசம் ராயபுரத்துல முடிசூடா மன்னனா இருந்தேன், யாரால தோத்தேன், பிஜேபியாலதான் தோத்தேன்’’ என வெளிப்படையாக சொல்லியவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதையே ஜெயக்குமாரை வைத்துதான் அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.

மீண்டும் கூட்டணி; அப்செட்டில் ஜெயக்குமார்

அதன்பிறகும் கட்சி சம்பந்தமான முக்கியமான விஷயங்களில் ஜெயக்குமார் மூலமாகவே தனது கருத்துகளை இபிஎஸ் சொல்லி வந்தார். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என விடாப்பிடியாக இருந்த ஜெயக்குமார் தற்போது மீண்டும் கூட்டணி அமைந்துள்ளதால் அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர்.

அதுவும் இபிஎஸ் டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பது தொடர்பாக தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லையே என்ற கவலையும் ஜெயக்குமாருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து திரும்பிய பிறகும் இபிஎஸ் தன்னை அழைத்து பேசுவார் என எதிர்பார்த்த ஜெயக்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் இபிஎஸ் பக்கம் நின்றும், கட்சியில் தற்போது எனக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என ஜெயக்குமார் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பி வருவதாக சொல்கின்றனர்.

தவிர்த்த ஜெயக்குமார் 

சென்னையின் முகமாக இருக்கக் கூடிய ஜெயக்குமார் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் ஆளாக வந்து நிற்பார். ஆனால் அதிமுக பாஜக கூட்டணி பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும்போது அந்த பக்கமே வராமல் தவிர்த்தார். மேடையிலும், இபிஎஸ் வீட்டில் நடந்த விருந்திலும் கே.பி.முனுசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணியை மட்டுமே பார்க்க முடிந்தது. எஸ்.பி.வேலுமணியை வைத்து இபிஎஸ் ஜெயக்குமாரை அழைத்தும் வேறு ஏதோ காரணங்கள் சொல்லி ஜெயக்குமார் வராமல் தவிர்த்ததாக சொல்கின்றனர்.

நாளுக்கு நான்கு ப்ரஸ்மீட் கொடுத்து ஹெட்லைனில் இடம்பெறும் ஜெயக்குமார் தற்போது வெளியே தலைகாட்டாமல் சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டார்.

கட்சி நலனுக்கு ஏற்புடையதல்ல

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஏற்கனவே அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலாவால் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது ஜெயக்குமாரும் முரண்டு பிடித்து வருவது கட்சி நலனுக்கு ஏற்புடையதல்ல. எனவே ஜெயக்குமாரை சமாதானப்படுத்தி மீண்டும் பேக் டூ ஃபார்முக்கு எடப்பாடி கொண்டு வர வேண்டும் என்கின்றனர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

திமுக, அதிமுகவுக்குப் பின்னடைவா? சீர்காழியில் கொத்துக் கொத்தாகத் தவெகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்.
திமுக, அதிமுகவுக்குப் பின்னடைவா? சீர்காழியில் கொத்துக் கொத்தாகத் தவெகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்.
இன்றோடு முடிந்தது என் அரசியல்... 88-வது பிறந்தநாளில் 'அரசியல் துறவறம்' அறிவித்தார் மருத்துவர் ராமதாஸ்!
இன்றோடு முடிந்தது என் அரசியல்... 88-வது பிறந்தநாளில் 'அரசியல் துறவறம்' அறிவித்தார் மருத்துவர் ராமதாஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
TVK Budget: விஜய் அரசின் முதல் பட்ஜெட்.. தவெக நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் அறிவிப்புகள் என்னென்ன?
TVK Budget: விஜய் அரசின் முதல் பட்ஜெட்.. தவெக நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் அறிவிப்புகள் என்னென்ன?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
Embed widget