மேலும் அறிய

நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடியில் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மீன்பிடி இறங்குதளத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்கள் பயன்படும் வகையில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரப்பாடி மீனவர் கிராமத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, விழா மீனவர்கள் மத்தியில் உரையாற்றியனார்.

மீனவர்கள் மத்தியில் அமைச்சர் 

அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சந்திரப்பாடி கிராமத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தை திறந்து வைத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் படகு அணையும் துறை, மீன் ஏலக்கூடம், வலைப்பின்னும் கூடம், கான்கிரீட் சாலை வசதி, தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மீனவர்கள் தங்கள் படகுகளை புயல் மற்றும் இயற்கை பேரிடர்களிடமிருந்து சேதமடையாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியும். சுகாதாரமான முறையில் மீன்களை விற்பனை செய்வதற்கும் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக பின்னுவதற்கும் வழிவகை செய்யப்படும். மீன்பிடி தொழில் ஊக்குவிக்கப்படும். 


நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

மீனவர் மக்கள் நல சார்ந்த திட்டங்கள் 

தமிழ்நாடு முதலமைச்சர் மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அதிக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மீன்பிடி தடைக்காலத்தில் ரூபாய் 5 ஆயிரமாக இருந்ததை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தந்துள்ளார். மீனவ மக்களை பாதுகாக்க பல திட்டங்களை தந்துள்ளார். அதில் முக்கியமானது கடற்கரையின் முகத்துவார பகுதிகளில் தடுப்பணையை அமைத்து தந்திருக்கின்றார். சந்திரபாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு வரைக்கும் என்னென்ன கோரிக்கைகள் வைத்துள்ளீர்களோ அதை அத்தனையும் கவனமாக நமது தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். இந்த மீன்பிடி ஏலக்கூடம் ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டிலும், வலைபின்னும் கூடம் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், படகணையும் தளம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார். 


நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

கடல் மட்டம் உயர்வதை தடுக்க நடவடிக்கை 

7 இடங்களில் உயர்மின் விளக்குகள் வேண்டும் என்று நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, அது புதுப்பட்டினத்தில் பழையாறு, திருமுல்லைவாசலில் தொடுவாய், பெருந்தோட்டத்தில் நாயக்கன்குளம் ஆகிவைகளில் அமைத்து அதை செயல்படுத்தி உள்ளார். கபடிக்கான உள்அரங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்வதை தடுப்பதற்கு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

அதிமுக்கியமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 

பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் 1 கோடியே 17 லட்சம் குடும்பத்தலைவிகள் மாதா மாதம் 1000 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட மகத்தான திட்டத்தை தந்தவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமே. நாம் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் எனவும், தினந்தோறும் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கும் தமிழக முதல்வருக்கு நாம் என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும்" என்றார்.

 
நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

இந்நிகழ்ச்சியில், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, மீன்வளத்துறை செயற்பொறியாளர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரபீயா நர்கீஸ் பானு, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம், சந்திரபாடி ஊராட்சிமன்றத்தலைவர் பிரமிளா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

75 years of DMK : “தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
“தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
Lotion Sunscreen Warning: ஆத்தி..! குழந்தைகளின் ஹார்மோன்களை பாதிக்கும் லோஷன், சன்ஸ்கிரீன்கள் - அதிர்ச்சி தகவல்
Lotion Sunscreen Warning: ஆத்தி..! குழந்தைகளின் ஹார்மோன்களை பாதிக்கும் லோஷன், சன்ஸ்கிரீன்கள் - அதிர்ச்சி தகவல்
Breaking News LIVE, 11 Sep: ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ தங்கம் பறிமுதல்
Breaking News LIVE, 11 Sep: ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ தங்கம் பறிமுதல்
Nellai, Tenkasi Power Shutdown: நெல்லை, தென்காசியில்  இன்றும் நாளையும் எங்கெல்லாம் மின்தடை?
Nellai, Tenkasi Power Shutdown: நெல்லை, தென்காசியில் இன்றும் நாளையும் எங்கெல்லாம் மின்தடை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ”GROUND-ஐ பெருக்குங்க”வெயிலில் சுத்தம் செய்த சிறுவர்கள்! சிவகங்கையில் பரபரப்புVCK ADMK Alliance : அதிமுகவை அழைத்த திருமா!உதயநிதி பதிலடி!நீடிக்குமா கூட்டணி?Rahul Gandhi Speech in USA : மோடி, RSS -ஐ ரவுண்டு கட்டிய ராகுல் காந்தி!ஆர்ப்பரித்த அமெரிக்கர்கள்Karur Bakery Fight : கரூரில் கந்தலான பேக்கரி..போதையில் வெறிச்செயல்..இளைஞர்கள் அட்டூழியம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
75 years of DMK : “தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
“தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
Lotion Sunscreen Warning: ஆத்தி..! குழந்தைகளின் ஹார்மோன்களை பாதிக்கும் லோஷன், சன்ஸ்கிரீன்கள் - அதிர்ச்சி தகவல்
Lotion Sunscreen Warning: ஆத்தி..! குழந்தைகளின் ஹார்மோன்களை பாதிக்கும் லோஷன், சன்ஸ்கிரீன்கள் - அதிர்ச்சி தகவல்
Breaking News LIVE, 11 Sep: ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ தங்கம் பறிமுதல்
Breaking News LIVE, 11 Sep: ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ தங்கம் பறிமுதல்
Nellai, Tenkasi Power Shutdown: நெல்லை, தென்காசியில்  இன்றும் நாளையும் எங்கெல்லாம் மின்தடை?
Nellai, Tenkasi Power Shutdown: நெல்லை, தென்காசியில் இன்றும் நாளையும் எங்கெல்லாம் மின்தடை?
வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது அவர்கள் விருப்பம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது அவர்கள் விருப்பம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
RP Udhayakumar: “இபிஎஸ் போடவே இல்லை; நான்தான் கையெழுத்து போட்டேன்” - கருணாநிதி நினைவிடம் குறித்து ஆர்.பி.உதயகுமார்
RP Udhayakumar: “இபிஎஸ் போடவே இல்லை; நான்தான் கையெழுத்து போட்டேன்” - கருணாநிதி நினைவிடம் குறித்து ஆர்.பி.உதயகுமார்
Train Ticket Booking: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போக திட்டமா? நாளை தொடங்குகிறது ரயில் டிக்கெட் முன்பதிவு..!
Train Ticket Booking: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போக திட்டமா? நாளை தொடங்குகிறது ரயில் டிக்கெட் முன்பதிவு..!
Southern Railway: அன்ரிசர்வ் பெட்டிகளிலும் இனி ஜாலியா போகலாம்! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் !
அன்ரிசர்வ் பெட்டிகளிலும் இனி ஜாலியா போகலாம்! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் !
Embed widget