மேலும் அறிய

காதலித்த பெண்ணுக்காக நண்பன் கொலையா? - மயிலாடுதுறையில் விஷம் கலந்த மதுவை குடித்த இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்

மயிலாடுதுறை அருகே தற்கொலை செய்து கொள்ள மதுவில் விஷம் கலந்து குடி நண்பனினிடம் விஷம் கலந்து மது வாங்கி குடித்து உயிரிழந்த  இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறவினர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே விஷம் கலந்த மதுவை குடித்த இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதத்தால் மதுபானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து நண்பனை கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாடுவதாக குற்றம்சாட்டி உயிரிழந்த இளைஞரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஷம் கலந்த மதுவை குடித்த இளைஞர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான ஜோதிபாசு. இவர் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் சில மாதங்களுக்கு முன்பு மனைவி சகிலா பிரிந்து கோயமுத்தூருக்கு சென்றுவிட்டார். மனைவியை ஊருக்கு வரசொல்லி வராததால் விரக்தியில் இருந்த ஜோதிபாசு கடந்த 9-ம் தேதி மாலை மதுவில் விஷம் கலந்து குடித்துகொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த 24 வயதான ஜெரால்டு என்பவர் ஜோதிபாசு வைத்திருந்த விஷம் கலந்த மதுவை எடுத்து குடித்ததால் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் ஜெரால்டு 9-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்பட்டது.


காதலித்த பெண்ணுக்காக நண்பன் கொலையா? - மயிலாடுதுறையில் விஷம் கலந்த மதுவை குடித்த இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்

இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப்பதிவு 

இதுகுறித்து அவரது தாயார் மேரிஸ்டெல்லா அளித்த புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணமாக (194) வழக்குப்பதிவு செய்த பெரம்பூர் காவல்துறையினர் ஜெரால்டு உடலை உடற்கூறு ஆய்வு செய்து, நேற்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தற்கொலைக்கு முயற்சித்த ஜோதிபாசு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 


காதலித்த பெண்ணுக்காக நண்பன் கொலையா? - மயிலாடுதுறையில் விஷம் கலந்த மதுவை குடித்த இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

இந்நிலையில் கணவரை பிரிந்துவாழும் பெண் ஒருவருடன் ஜோதிபாசு மற்றும் ஜெரால்டுக்கும் பழக்கம் இருந்ததாகவும், இருவருக்கும் இடையேயான பழக்கம் தொடர்பாக ஜெரால்டு ஜோதிபாசு இடையே முன்விரோதம் இருந்ததால் ஜோதிபாசு திட்டமிட்டு மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து, ஜெரால்டை கொலை செய்துள்ளார் என்று குற்றம்சாட்டிய உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜோதிபாசுவை கைது செய்ய வேண்டும். மேலும் இறந்த ஜெரால்டு குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி பில்லாவிடந்தையில் இருந்து கடலி கிராமத்தில் செம்பனார்கோவில் - நல்லாடை மெயின்ரோட்டில் ஜெரால்டு உடலை அடக்கம் செய்யாமல் கொண்டு வந்து சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


காதலித்த பெண்ணுக்காக நண்பன் கொலையா? - மயிலாடுதுறையில் விஷம் கலந்த மதுவை குடித்த இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்

சாலையில் வைக்கப்பட்ட உடல்

தனது மகன் ஜெரால்டை ஜோதிபாசு அவரது சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கிதாகவும், அதனைத் தொடர்ந்து தற்பொது மதுவில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்துவிட்டனர் என்று குற்றம்சாட்டினார். இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி, தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாளில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.


காதலித்த பெண்ணுக்காக நண்பன் கொலையா? - மயிலாடுதுறையில் விஷம் கலந்த மதுவை குடித்த இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்

ஆனால் அதனை ஏற்காமல் பிரீசர் பாக்ஸ்சை கொண்டுவந்து ஜெரால்டு உடலை அதில் வைத்து   6 மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் செம்பனார்கோவில் நல்லாடை சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்ததன் பேரில் 6 மணி நேர போராட்டத்தை விலக்கி கொண்டு ஜெரால்டு உடலை சாலையில் இருந்து எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget