மேலும் அறிய

மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

சீர்காழி அருகே அரசு மதுபான கடையால் அல்லல்படும் விவசாயிகள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் செயல்படும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வில்லை எனில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் பிரச்சினை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சியில் அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் முதல் முதலாக அரசு சார்பில் திருமுல்லைவாசல் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளி அருகே அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த கடையினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அதன் விளைவாக அங்கிருந்து டாஸ்மாக் கடையினை சற்று ஊருக்கு வெளியே கொண்டு சென்றனர்.


மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

மீண்டும் மாற்றப்பட்ட டாஸ்மாக் 

ஆனால், அப்பகுதி சீர்காழி திருமுல்லைவாசல் செல்லும் பிரதான நெடுஞ்சாலை என்பதால் டாஸ்மாக் அமைந்திருந்த இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வந்தன. அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் மீண்டும் டாஸ்மாக் கடையினை இடம் மாற்றம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் சுமூக முடிவு எட்டப்படததால் அந்த இடத்தில் இருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை வேறு இடமான  திருமுல்லைவாசல் தொடுவாய் சாலையில் குடிருப்புகள் இல்லாத இடத்திற்கு மாற்றப்பட்டது.


மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

விவசாயிகள் எதிர்ப்பு 

இந்நிலையில் சூழலில் அப்பகுதி முழுவதும் முந்திரி மற்றும் சவுக்கு மரங்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது டாஸ்மாக் கடை அப்பகுதியில் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு மது வாங்க வரும் மது பிரியர்கள் மதுவை வாங்கி கொண்டு அருகில் உள்ள முந்தரி மற்றும் சவுக்க காடுகளில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். அவர்கள் மது அருந்துவது மட்டும் இன்றி மது பாட்டில்களை உடைந்து போடுவது, பிளாஸ்டிக் கவர்கள், வாட்டர் பாட்டில்கள் என விளை நிலங்களில் போட்டு விடுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக குடி போதையில் முந்தரி மற்றும் சவுக்கு மரங்களுக்கு தீவைத்து விட்டு சென்று விடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் முந்தரி மரங்கள் தீயிக்கு இரையாகினர். இந்த சூழலில் தற்போது மீண்டும் முந்திரி மரத்திற்கு தீவைத்து சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மதுகடையினை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். 


மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

எச்சரிக்கை விடுக்கும் விவசாயிகள் 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தொடர்ந்து மது அருந்திவிட்டு அடிக்கடி அப்பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மது பிரியர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் அருகே உள்ள முந்திரி காட்டை மதுபோதையில் இருந்த சிலர் தீவைத்து எரித்துவிட்டனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, ஆகையால் தங்கள் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், இந்த கடையால் விவசாயக் கூலி தொழிலாளர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். மேலும் மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதியளித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
Mayiladuthurai Power Shutdown (09.06.2026) :உங்க ஊர் இதுல இருக்கா? ஜூன் 9-ல் 8 மணி நேரம் கரண்ட் கட் - லிஸ்ட்டை வெளியிட்ட மின் வாரியம்!
Mayiladuthurai Power Shutdown (09.06.2026) :உங்க ஊர் இதுல இருக்கா? ஜூன் 9-ல் 8 மணி நேரம் கரண்ட் கட் - லிஸ்ட்டை வெளியிட்ட மின் வாரியம்!
கடலுக்குள் மீன் வடிவில் மறைந்திருந்த சூரன்; அலைகடலில் வதம் செய்த முருகன்! தரங்கம்பாடியில் நடந்த ஆன்மிக அதிசயம்!
கடலுக்குள் மீன் வடிவில் மறைந்திருந்த சூரன்; அலைகடலில் வதம் செய்த முருகன்! தரங்கம்பாடியில் நடந்த ஆன்மிக அதிசயம்!
"ஐந்தாயிரம் ரூபாய் தள்ளுபடி விவசாயிகளை கேலி செய்வதா?" - மயிலாடுதுறையில் தவெக அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget