மேலும் அறிய

மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

சீர்காழி அருகே அரசு மதுபான கடையால் அல்லல்படும் விவசாயிகள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் செயல்படும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வில்லை எனில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் பிரச்சினை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சியில் அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் முதல் முதலாக அரசு சார்பில் திருமுல்லைவாசல் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளி அருகே அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த கடையினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அதன் விளைவாக அங்கிருந்து டாஸ்மாக் கடையினை சற்று ஊருக்கு வெளியே கொண்டு சென்றனர்.


மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

மீண்டும் மாற்றப்பட்ட டாஸ்மாக் 

ஆனால், அப்பகுதி சீர்காழி திருமுல்லைவாசல் செல்லும் பிரதான நெடுஞ்சாலை என்பதால் டாஸ்மாக் அமைந்திருந்த இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வந்தன. அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் மீண்டும் டாஸ்மாக் கடையினை இடம் மாற்றம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் சுமூக முடிவு எட்டப்படததால் அந்த இடத்தில் இருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை வேறு இடமான  திருமுல்லைவாசல் தொடுவாய் சாலையில் குடிருப்புகள் இல்லாத இடத்திற்கு மாற்றப்பட்டது.


மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

விவசாயிகள் எதிர்ப்பு 

இந்நிலையில் சூழலில் அப்பகுதி முழுவதும் முந்திரி மற்றும் சவுக்கு மரங்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது டாஸ்மாக் கடை அப்பகுதியில் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு மது வாங்க வரும் மது பிரியர்கள் மதுவை வாங்கி கொண்டு அருகில் உள்ள முந்தரி மற்றும் சவுக்க காடுகளில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். அவர்கள் மது அருந்துவது மட்டும் இன்றி மது பாட்டில்களை உடைந்து போடுவது, பிளாஸ்டிக் கவர்கள், வாட்டர் பாட்டில்கள் என விளை நிலங்களில் போட்டு விடுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக குடி போதையில் முந்தரி மற்றும் சவுக்கு மரங்களுக்கு தீவைத்து விட்டு சென்று விடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் முந்தரி மரங்கள் தீயிக்கு இரையாகினர். இந்த சூழலில் தற்போது மீண்டும் முந்திரி மரத்திற்கு தீவைத்து சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மதுகடையினை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். 


மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

எச்சரிக்கை விடுக்கும் விவசாயிகள் 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தொடர்ந்து மது அருந்திவிட்டு அடிக்கடி அப்பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மது பிரியர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் அருகே உள்ள முந்திரி காட்டை மதுபோதையில் இருந்த சிலர் தீவைத்து எரித்துவிட்டனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, ஆகையால் தங்கள் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், இந்த கடையால் விவசாயக் கூலி தொழிலாளர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். மேலும் மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதியளித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

உங்க ஏரியாவுல EB பிரச்சனை இருக்கா? மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 12-ல் சிறப்பு குறைகேட்பு கூட்டம்! 
உங்க ஏரியாவுல EB பிரச்சனை இருக்கா? மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 12-ல் சிறப்பு குறைகேட்பு கூட்டம்! 
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Embed widget