மேலும் அறிய

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்: உங்கள் கனவை நனவாக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்..!

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பித்து, அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விதமாக 'தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை' அறிவித்துள்ளது. இந்த விருதுகள், தமிழகத்தின் சுற்றுலாத் துறைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பின் சாராம்சம்:

அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

2021-2022 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில், சுற்றுலாத் துறை அமைச்சர், சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார். அதில், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது ஒரு முக்கியமான அறிவிப்பாகும். இந்த அறிவிப்பின் அடிப்படையில், தற்போது இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விருதின் நோக்கம்

இந்த விருதுகள், தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தொழில் முனைவோரையும், நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படுகின்றன. சுற்றுலாத் துறையின் பல்வேறு அம்சங்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிப்பதன் மூலம், மேலும் பல புதிய தொழில் முனைவோர்கள் இத்துறைக்கு வர ஊக்குவிக்கப்படுவார்கள். இது மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த விருதுகள், பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், உணவகங்கள், தங்குமிடங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்கு சாதகமாகப் பங்களித்த பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

15 பிரிவுகளில் விருதுகள்

2025 -ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, உலக சுற்றுலா தினத்தன்று இந்த விருதுகளின் முதல் பதிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். 

இந்த விருதுகள் பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்பட உள்ளன

 

  • தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்
  • சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்
  •  சிறந்த பயண பங்குதாரர்
  •  சிறந்த விமான பங்குதாரர்
  •  சிறந்த தங்குமிடம்
  •  சிறந்த உணவகம்
  • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம்
  • சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம்
  •  சுத்தமான சுற்றுலாத்தலம்
  • பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர்
  • சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர்
  • சிறந்த MICE (Meetings, Incentives, Conventions, and Exhibitions) சுற்றுலா அமைப்பாளர்
  • சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்
  • சிறந்த சுற்றுலா வழிகாட்டி
  • தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா வினை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரபடுத்துதல்
  • சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம்

 

இந்த விரிவான பிரிவுகள், சுற்றுலாத் துறையின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கி, தகுதியான பங்களிப்பாளர்களை அங்கீகரிக்க உதவும்.

விண்ணப்பிக்கும் முறை

விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சுற்றுலாத் தொழில் முனைவோர்கள், www.tntourismawards.comஎன்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 15, 2025 ஆகும்.

மாவட்ட ஆட்சியரின் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோர்களும், தங்களுக்குப் பொருத்தமான விருதுப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்து, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விருதுகள், சுற்றுலாத் துறையில் உள்ள திறமையையும், கடின உழைப்பையும் அங்கீகரித்து, தமிழகத்தின் சுற்றுலாத் துறையை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த விருதுகள், மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
Embed widget